Azhagu Serial: ஏங்க... பொய்க்கு ஒரு அளவில்லையா.. ஸ்ஸ்ஸப்பா முடியலைடா சாமி!
சென்னை: வயசானாலும் அழகும் ஸ்டைலும் உன்னை விட்டுப் போகலை என்று, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தைப் பார்த்து படையப்பா படத்தில் ரம்யா கிருஷணன் சொல்லி இருப்பார்.
அது போலத்தான் வயசானாலும், அந்த கிரேஸ் குறையாமல் மென்மையான அழகுடன் மிளிர்கிறார் நடிகை ரேவதி. சில பேருக்கு வயதானால், முகத்தில் கடின தன்மை வந்துவிடும்.. ஆனால் இதில் ரேவதி விதிவிலக்கு.
சன் டிவியின் அழகு சீரியலில் ஸ்டார் காஸ்ட் நடிகையாக அழகு என்கிற அழகம்மை கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.
காயத்ரி ஜெயராம் ரேவதி
அழகு சீரியலில் நடிகை ரேவதியுடன், மஞ்சள் காட்டு மைனா பாடல் நாயகி, காயத்ரி ஜெயராமும் நடித்து இருக்கிறார். இவருக்கு கொஞ்சம் வயதான கெட்டப்தான். இவங்க பேர் சகுந்தலா தேவி தி கிரேட் லாயர் கதாபாத்திரத்தில் நடிக்கிறாங்க. ஆனால், அழகம்மை வீட்டுக்கு சம்பந்தி. அழகம்மையின் இரண்டு மருமகள்களும் தனது காணாமல் போன இரண்டு மகள்களென்று சகுந்தலா தேவிக்கு தெரிய வருகிறது.
விஜய்-ண்ணா "வெறித்தனம்".. தெறிக்க விட்ட டெலிகாஸ்ட்.. மொத்தமாக கட்டிப் போட்ட சன் டிவி
அம்மாவுடன் பூர்ணா
பூர்ணாவுக்குத்தான் சுதாவை சுத்தமாக பிடிக்காதே. புகுந்த வீட்டில் பிடிக்காமல் அவளுக்கு பல கெடுதல்களை செய்து, பின்னர் அம்மாவை கண்டுபிடித்தவுடன் அம்மா வீட்டுக்கே வந்துட்டவள் பூர்ணா. சுதாவுக்கு கெடுதல் செய்ய போயி, கடைசியில்தான் மாட்டிக்கிட்டோம் என்று தெரிந்து காரை பதட்டத்தில் ஓட்டுகிறாள்.
கலைந்தது கரு
பூர்ணா வேகமாக ஓட்டியதில்,கார் எதிரில் வருபவர் மேல் மோத போயி, பிரேக் போடுகையில் ஸ்டியரிங் வயிற்றில் மோதி, பூர்ணா வயிற்றிலிருந்த கரு கலைந்து விடுகிறது. இதை சாக்காக வைத்து மேலும்பழி வாங்க துடிக்கிறாள் பூர்ணா. பூர்ணாவின் சுதாவின் கெட்ட குணத்தால், சுதாவை தனது பெண் என்று கூட சொல்லக் கூடாது என்று சகுந்தலா தேவியிடம் சத்தியம் வாங்கிக் கொள்கிறாள் பூர்ணா. சுதாவை தனது அக்காவாக ஏத்துக்க பூர்ணாவுக்கு விருப்பம் இல்லையாம்.
கொலை செய்ய
சுதாவை கொலை செய்ய பூர்ணா ஆள் அனுப்பியதைத் தெரிந்துக் கொண்ட சுதா, போலீசில் புகார் செய்து, சுதாவை அரெஸ்ட செய்தும் ஆச்சு.ஆனால், இன்னும் தனது கணவன் மகேஷிடம் நல்லவள் என்று டிராமா போட்டுக் கொண்டு இருக்க, ஆனால், மகேஷுக்கு உண்மை தெரிந்துவிடுகிறது. அவனும் தன் பக்கம் இல்லை என்று தெரிந்து போலீஸ் ஸ்டேஷனில் மயக்கம் போட்டு விழுவது போல நடிக்கிறாள்.
பூர்ணா கர்ப்பம்
ஆஸ்பத்திரிக்கு போனால், பூர்ணா கர்ப்பமா இருக்கான்னு டாக்டர் சொல்றாங்க.இப்போதான் கர்ப்பம் கலைஞ்சுது. அதுக்குள்ளேயே எப்படின்னு பார்க்கறவங்க யோசிக்க மாட்டாங்கன்னு நினைச்சுக்கிட்டாங்க போல.. அது ஒரு புறம் இருக்க, வீட்டிலும் பூர்ணா கர்ப்பம்னு நம்பிடறாங்க. அப்போதுதான் தன் தோழிகிட்டே சொல்றா..நான் உண்மையா கர்ப்பம் இல்லை.என் புருஷன் மகேஷ்கிட்ட நல்லபேர் வாங்கணும்னுதான் அப்படி பொய் சொன்னேன்னு சொல்றா பூர்ணா.
பொய் சொல்ல ஒரு அளவு இல்லை? ஒரு மாசத்துக்குள்ள கர்ப்பம் கலைஞ்சு கர்ப்பம் ஆகிருவாங்களா? விஞ்ஞானம், மெய்ஞானம் ரெண்டையும் மாத்திருவாங்க போல இருக்கே!