Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செய்வினை செய்துவிடுவதாக பெண் மிரட்டல்! பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் சதீஷ்குமார் புகார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் கோபி கேரக்டரில் நடிக்கும் நடிகர் சதீஷ்குமாருக்கு பெண் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல் பாக்கியலட்சுமி. அதில் நடித்து வருபவர் சதீஷ்குமார் (40). இவர் அந்த சீரியலில் கோபி எனும் கேரக்டரில் நடித்து வருகிறார். இதனால் அவர் ரசிகர்களிடையே பிரபலம்.

television crime

இவர் அப்பாவித்தனம் கலந்த நடிப்பிற்காகவே இவரது சீரியலை பலர் பார்த்து வருகிறார்கள். இவர் சமூகவலைதளங்களிலும் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார். அவ்வப்போது காலை நேரங்களில் நல்ல வார்த்தைகளை கூறி எல்லாரும் நன்றாக இருக்க ஆண்டவனை பிரார்த்திப்பதாக கூறி எல்லாருக்கும் அந்த நாளை இனிய நாளாக்குவார்.

மேலும் நிறைய மோட்டிவேஷனல் ஸ்பீச்செல்லாம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொடுத்துவிடுவார். இவரது பாக்கியலட்சுமி கதாபாத்திரத்தில் பாக்கியா, ராதிகா ஆகிய இரு மனைவிகளுடன் படாதபாடுபடுகிறார். சீரியலில்தான் இரு பெண்களால் பிரச்சினை என்றால் இவருக்கு நிஜ வாழ்விலும் ஒரு பெண்ணால் சூனியம் வைக்கும் அளவுக்கு மிரட்டல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் திருவான்மியூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: கடந்த ஆண்டு கலாசேத்ரா காலனியில் உள்ள அருள்மிகு அறுபடை முருகன் கோயிலுக்கு நான் சுவாமி தரிசனம் செய்ய சென்றேன். அப்போது 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் என்னுடன் செல்பி எடுக்க வேண்டும் என கேட்டார்.

இதற்கு நான் மறுப்பு தெரிவித்துவிட்டேன். அத்துடன் சில நாட்கள் கழித்து அந்த பெண், எனது தொலைபேசிக்கு அழைப்பு விடுத்தார். செல்பி எடுக்க வேண்டும் என்றும் தொந்தரவு தரும் வகையிலும் அடிக்கடி எனக்கு போன் செய்தார், இதனால் நான் அந்த பெண்ணின் எண்ணை பிளாக் செய்துவிட்டேன்.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு எனது அடையார் வீட்டுக்கே வந்த அந்த பெண், குங்குமம் தடவிய எலுமிச்சை பழத்தை வீட்டில் வைத்துவிட்டு செய்வினை செய்துவிடுவேன் என மிரட்டினார். இதுகுறித்து அந்த பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சதீஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாக்கியலட்சுமி சீரியலில் நன்றாக நடிக்கிறார் என ஒரு சாரார் பாராட்டினாலும் , ஒரு சிலர் அவரை திட்டி வருவதாகவும் கடந்த 2022 ஆம் ஆண்டு வருத்தமாக ஒரு பதிவை போட்டிருந்தார். அதில் சீரியல் என்பது நடிப்பு, இதில் நல்லா நடித்தாலும் திட்டுறாங்க, இல்லாவிட்டாலும் திட்டுறாங்க, நான் என்ன செய்யுறதுனு புரியலை.

கடவுள் எனக்கு ஒரு திறமை கொடுத்திருக்கிறார். அதை வெளிப்படுத்தித்தான் கோபி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறேன். சத்தியமாக எனக்கு இந்த வாழ்க்கை குறித்து ஒன்றுமே புரியலை, டைரக்டர் கொடுக்கும் பணியை நான் செய்கிறேன். அதை மனதிருப்தியுடன் செய்து வருகிறேன். இவ்வாறு ஒரு பதிவை அவர் போட்டிருந்தார். சதீஷ்குமாரே வருத்தப்படும் அளவுக்கு அவருக்கு இந்த சீரியல் பெரிய பெயரை பெற்றுத் தந்துள்ளது என்பது இந்த பதிவின் மூலமே அறியலாம்.

இந்த சீரியலில் மலையாள நடிகை சுசித்ரா, ரேஷ்மா பசுபுலேட்டி, ரஞ்சித், உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள். இது விஜய் டிவியில் 2020 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. டிஆர்பியில் டாப் சீரியலாக இது இருக்கிறது. சதீஷின் அப்பாவி முகம், பிளே பாய் கேரக்டரில் ராதிகாவிடமும் பாக்கியாவிடமும் சிக்கி திணறுகிறார் கோபி!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+