முறைப்பாய் .. விறைப்பாய்... கெத்து காட்டும் தர்ஷா குப்தா!
சென்னை: பிளவுஸ் கூட போடாமல் கெத்தாக ஒரு போஸ் கொடுத்து கலக்கியுள்ளார் தர்ஷா குப்தா.
சிரித்தபடியே போஸ் கொடுத்து போர் அடித்து விட்டது என தற்போது முறைத்தபடி கெத்து காட்டி பார்ப்பவர்களை மிரள வைத்து இருக்கும் தர்ஷா குப்தாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்கள் தான் இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செந்தூரப்பூவே சீரியலில் தற்போது நெகட்டிவ் ரோலில் நடித்துக் கொண்டிருக்கும் தர்ஷா குப்தா இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வருகிறார் .

முதல் சீரியல்
இவர் முதன் முதலில் ஜீ தமிழில் முள்ளும் மலரும் சீரியலில் அறிமுகமாகி இருந்தார் .இந்த சீரியலில் விஜி கேரக்டரில் ரசிகர்களின் மனதில் தனக்கான இடத்தை பிடித்த இவர் முதலில் இந்த சீரியலில் இவர்தான் ஹீரோயினி என நடிக்கும்போது பலரும் இவரை ஏளனமாக பார்த்திருக்கின்றனர் .அந்த கஷ்டமான நேரத்தை இப்போது நினைத்தாலும் கண்ணீர் வருகிறது என கூறியிருக்கிறார்.

கிராமத்துப் பெண்
இந்த சீரியலில் முதலில் ஹீரோயினாக அறிமுகமான நடிகை பின்பு வில்லியாக மாறி இவர் கிராமத்து பெண்ணாக ஹீரோ மீது ஒருதலைக்காதலோடு பாசத்தை பிழியும் கேரக்டரில் பக்காவாக நடித்திருப்பார் .முதல் சீரியலில் இவருக்கு நடிப்பதற்கு தெரியாத சில நேரங்களில் அங்கு இருந்தவர்கள் இவரை அலட்சியமாக நடத்தியிருக்கின்றனர் .இது ரொம்ப மோசமான சூழ்நிலையை இவருக்கு கொடுத்து இருக்கிறது .

ரசிகர்கள் மனதில் தர்ஷா
ஆனாலும் அதையெல்லாம் தாண்டி அந்த சீரியலில் மூலமாக ரசிகர்களின் மனதை கவர்ந்து விட்டார் .அதற்குப் பிறகு இவர் அவளும் நானும், மின்னலே, செந்தூரப்பூவே என தொடர்ந்து சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் .ஆனாலும் தற்போது இவருக்கு கிடைக்கும் வாய்ப்பு எல்லாமே நெகட்டிவ் ரோல் ஆகவே இருக்கிறது .

குழந்தை மாதிரி
ஆனால் சீரியலில் மட்டும்தான் அப்படி மற்ற நேரங்களில் நான் குழந்தைதான் என கொஞ்சி கொஞ்சி ரசிகர்களை கவர்ந்து இழுத்து வருகிறார். இதுவரைக்கும் சீரியலில் மட்டும்தான் தனது வில்ல பார்வையை பார்த்துக் கொண்டிருந்தவர் தற்போது இன்ஸ்டாகிராமிலும் தன்னுடைய வில்லத்தனத்தை காட்ட ஆரம்பித்து விட்டார் .இவருடைய இந்த போஸ் பார்த்து பயந்து போன ரசிகர்கள் என்ன இப்படி ஒரு புது அவதாரம் எடுத்து இருக்கிறீர்கள் என கேட்டு வருகின்றனர் .

ரொம்ப அழகுடா
ஆனாலும் அதிலும் இவருடைய ஓவர் க்யூட் தான் சிலர் ரசிகர்களின் கண்களுக்கு தெரிகிறதாம். அதுவும் ஜாக்கெட் அணியாமல் புடவையை மட்டும் கட்டிக் கொண்டு ஒய்யாரமாக அமர்ந்திருக்கும் அழகை பார்த்து பலர் ஜொள்ளு வடித்து கமெண்ட் போட்டு இருக்கின்றனர் .இவர் முறைத்தபடி போஸ் கொடுத்தாலும் அதிலேயும் இப்படி ரசிக்கிறீர்கள் என நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர்.

மக்களுக்கு உதவி
தற்போது ஊரடங்கு நேரத்தில் இவர் கஷ்டப்படும் மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து கொண்டு பிஸியாக இருந்தாலும் போட்டோஷூட் நடத்தி இருக்கிறார். அதுவும் நீண்ட நாளுக்கு பிறகு மீண்டும் செந்தூரப்பூவே சீரியலில் தன்னுடைய நடிப்பையும் ஆரம்பித்துவிட்டார் என இவர் போஸ்ட் போட்டு இருக்கிறார் . இதனைப் பார்த்ததும் பார்த்து கவனமாக இருங்கள் .இந்த மாதிரி உங்க பார்வையைப் பார்த்து நாங்க வேணா பயப்படலாம் ஆனால் கொரோனா பயப்படாது என சிலர் கமெண்ட் போட்டு இருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications