Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"பழைய பஞ்சாங்கத்தை" தூக்கி எறிந்த மனோபாலாவின் மனைவி.. கணவர் இறந்த ஒரே வாரத்தில் நெகிழ வைத்த உஷா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகரும் இயக்குநருமான மனோ பாலா உயிரிழந்த ஒரே வாரத்தில் குடும்ப வழக்கத்தை தகர்த்தெறிந்து அவருடைய மனைவி செய்த செயல் நெகிழ வைக்கிறது. மனோபாலாவின் மனைவி உஷா மகாதேவனை பாராட்டி வருகிறார்கள்.

மனோபாலா கோவை சூலூரை சேர்ந்தவர். இவர் சிறுவயதிலேயே சினிமா மீது தீராத காதலால் பெற்றோரிடம் படிப்பதாக கூறிவிட்டு சென்னைக்கு வந்திருந்தார். இவருக்கு பெற்றோர் அனுப்பும் பணத்தை வைத்துக் கொண்டு படிக்காமல் படம் பார்த்தார்.

Do you know What did Manobala wife do with his dresses?

சென்னையில் உள்ள அனைத்து திரையரங்குகிலும் பல படத்தை பார்த்த அவர் தானும் இயக்குநராக வேண்டும் என விரும்பினார். இதையடுத்து மனோபாலாவுக்கு ஒரு முறை கமல்ஹாசனை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இருவரும் சில நிமிடங்கள் பேசிய நிலையில் நண்பர்களாகிவிட்டனர்.

பின்னர் மனோபாலாவின் இயக்குநர் கனவுக்கு உயிர் கொடுக்க விரும்பிய கமல்ஹாசன் அவரை பாரதிராஜாவிடம் அறிமுகப்படுத்தி உதவி இயக்குநராக சேர்த்துக் கொள்ள சொன்னார். புதிய வார்ப்புகள் படத்தின் மூலம் உதவி இயக்குநராக அறிமுகமாகிய மனோபாலா தனது திறமையை வளர்த்துக் கொண்டு ஆகாய கங்கை எனும் படத்தை இயக்கினார். இந்த படம் பொருளாதார ரீதியில் தோல்வியை தந்தது.

இதையடுத்து 3 ஆண்டுகள் கழித்து பிள்ளை நிலா படத்தை எடுத்து நிறைய ஹிட் படங்களை கொடுத்தார். தமிழ், கன்னடம், ஹிந்தி, தெலுங்கு மொழிகளிலும் படங்களை இயக்கியுள்ளார். அது போல் சீரியல்களையும் மனோபாலா இயக்கியுள்ளார். அது மட்டுமல்லாமல் காமெடி, குணசித்திர நடிகராகவும் ரசிகர்களை மகிழ்வித்தார்.

Do you know What did Manobala wife do with his dresses?

நெருங்கிய நண்பர்களுக்கு சமைத்து கொடுப்பதில் மனோபாலா வல்லவராம். கடந்த ஜனவரி மாதம் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஆஞ்சியோ சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட்டது. பின்னர் உடல்நலம் தேறி மீண்டும் ஷூட்டிங்கில் கலந்து கொண்டார் மனோபாலா. இந்த நிலையில் 15 நாட்களாக மனோபாலா கல்லீரல் பிரச்சினையால் பாதிக்கப்பட்டார்.

இதனால் வீட்டிலேயே சிகிச்சை மேற்கொண்டு வந்த அவர் கடந்த 3 ஆம் தேதி காலமானார். அவருக்கு 69 வயது. இவருடைய மறைவு ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் பெரிய அளவில் பாதித்தது. இவருக்கு பலர் இரங்கல்களை தெரிவித்துள்ளனர். அவருக்கு ஹரீஷ் என்ற மகன் உள்ளார். அவர் அமெரிக்காவில் பணியாற்றி வந்தார்.

தனது தந்தைக்கு உடல்நிலை மோசமடைந்த நிலையில் ஹரீஷ் தனது மனைவி பிரியாவுடன் சென்னை வந்தார். அவர்தான் கடைசி வரை கூடவே இருந்து கவனித்துக் கொண்டார். மனோபாலாவின் இறப்பால் ராதிகா உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் அதிர்ச்சி அடைந்தனர். ராதிகாவும் மனோபாலாவும் நண்பர்கள். இறப்பதற்கு முன்பு கூட மனோபாலாவுடன் போனில் பேசியதாக ராதிகா கண்ணீர் மல்க தெரிவித்திருந்தார்.

மனோபாலாவின் குடும்ப வழக்கபடி காலம் காலமாக பின்பற்றப்பட்டு வந்த ஒரு விஷயத்தை மாற்றியுள்ளார் அவருடைய மனைவி உஷா. பொதுவாக மனோபாலாவின் குடும்ப வழக்கப்படி ஒருவர் இறந்துவிட்டால் அவர்களுடைய உடைகள், உடைமைகளை தீயிட்டு கொளுத்திவிடுவார்களாம். ஆனால் தனது கணவரின் உடைகளை தீயிட்டு கொளுத்த விரும்பாத மனோபாலாவின் மனைவி உஷா மகாதேவன் அவற்றை ஆதரவற்றோர் இல்லத்திறகு கொடுத்து அனுப்பிவிட்டாராம். கணவரின் நினைவாக ஒரேஒரு வாட்ச்சை மட்டும் உஷா வைத்துள்ளாராம். இவரது செயலை பலர் பாராட்டி வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+