அட... சன் டிவி எதிர்பார்ப்பு உண்மையாகிப் போச்சே!
சென்னை: நான் யாருன்னு ஒரு குழந்தையிடம் கோவை சரளா கேட்க, காஞ்சனான்னு பட்டுன்னு சொன்னுச்சு பாருங்க...இதை இதைத்தான் சன் டிவி எதிர்பார்த்தது.
சன் டிவி என்ன எதிர்பார்த்து குட்டி சுட்டீஸ் நிகழ்ச்சித் தொகுப்பாளராக கோவை சரளாவை கொண்டு வந்ததோ அது நிறைவேறிடுச்சுங்க.
காஞ்சனா படத்தின் பார்ட் 3 வரை நடித்து குழந்தைகள் மனதை கொள்ளை கொண்ட கோவை சாரளா.சன் டிவியில் வரும் ஞாயிறு முதல் குட்டி சுட்டீஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார்.
இமான் அண்ணாச்சி
குட்டி சுட்டீஸ் முதல் சீசன் நிகழ்ச்சியை இமான் அண்ணாச்சி தொகுத்து வழங்கினார்.அதில் சில குழந்தைகளிடம் வம்படியாக பேசி, வெளியில் பிரச்சனைகள் கூட எழுந்ததாக தகவல்கள் வெளியாகின. இது பெரிதான நிலையில்தான் அந்த ரியாலிட்டி ஷோவை சன் டிவி நிறுத்தி வைத்தது என்றும் சொல்லப்பட்டது.
சந்தேகம் இல்லை
இமான் அண்ணாச்சி குழந்தைகள் ஷோவை சரியாக நடத்துவாரா என்று யாருக்குமே சரியான புரிதல் இல்லாத நிலையில்,அவரை வைத்து சன் டிவி குட்டி சுட்டீஸ் ரியாலிட்டி ஷோவை நடத்தி வெற்றி கண்டது.அண்ணாச்சியும் சக்கை போடு போடும்படி நிகழ்ச்சியைக் கொண்டு போனார்.
கோவை சரளா
காஞ்சனா 2 மற்றும் காஞ்சனா 3 இல் கோவை சரளா குழந்தைகள் எதிர்பார்த்தபடி அடக்க முடியாத சிரிப்பை வரவழைத்து இருப்பார்.அதிலும் இவருடன் தேவதர்ஷிணி காம்போ காமெடி பெரியவர்களையும் கூட விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது. அதன் படி கோவை சரளா இந்த நிகழ்ச்சிக்கு சரியான தேர்வு என்றுதான் சொல்ல வேண்டும்.
டிக்டாக் வீடியோக்கள் வெறும் விளையாட்டு.. விபரீதம்.. எது உண்மை?
குழந்தைகள் விருப்பம்
காஞ்சனாவின் வெற்றியை கணக்கிட்ட சன் டிவி, கோவை சரளா குழந்தைகள் மனதில் பெரும் இடத்தைப் பிடித்து இருப்பதை தெரிந்து, அவர் கையில் இந்த குட்டி சுட்டீஸ் ரியாலிட்டி ஷோவை கொடுத்து உள்ளது. இதன் ப்ரோமோ தற்போது ஒளிபரப்பாகி வரும் நிலையில், நீங்கள் காஞ்சனா என்று ஒரு குழந்தை சொல்ல ஆரம்பமே அமர்க்களமாக இருக்கிறது.