அத்தனையும் பொய்யா.. நடிகர் ஸ்ரீ க்கு வசியம் வைத்து, உடல் மெலிந்து.. அதில் ஏராளமான வீடியோ AI: பிரபலம்
சென்னை: நடிகர் ஸ்ரீ மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும், டாக்டர்களின் அறிவுறுத்தலின்படி, சோசியல் மீடியாவிலிருந்து விலகி, சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், அவரைப்பற்றி வரும் தவறான தகவல்களும், வதந்திகளும் தங்களை பாதிப்பதாகவும், ஸ்ரீயின் உடல்நிலை குறித்த வதந்திகளை தவிர்க்குமாறும் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டிருந்த அறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. இந்நிலையில், மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
AG Modern Cinema என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பயில்வான் ரங்கநாதன், "நடிகர் ஸ்ரீ, சினிமா பின்புலமே இல்லாதவர்.. சினிமா நடிகர்களுக்கு தெரிந்திருக்க வேண்டிய தந்திரம், டெக்னிக் அறியாதவர்.. அவர நடித்த படங்கள் ஹிட்டானாலும், அதற்கு பிறகு ஸ்ரீக்கு படங்கள் எதுவுமே இல்லை.. புதுப் படங்கள் எதுவுமே தனக்கு கிடைக்கவ்ல்லை என்பதுமே அப்செட் ஆகிவிட்டார்.. அதனால் தனிமையை விரும்ப ஆரம்பித்துவிட்டார்.

காதில் பேசுவது யார்
தனிமையை விரும்புவது எப்போதுமே யாருக்குமே ஆபத்துதான்.. அப்படி இருந்தால் மனநலம் பாதிக்கப்படுவார்கள், அல்லது தற்கொலை முயற்சியில் இறங்கிவிடுவார்கள்.. நடிகர் ஸ்ரீக்கு காதில் யாரோ பேசுவது போன்று கேட்டுக் கொண்டேயிருக்கும். இதுபோன்ற நோயில் அவர் பாதிக்கப்பட்டிருக்கிறார்.. ஒருமுறை தனக்கு கூட அப்படியொரு பிரச்சனை இருப்பதாக கூறினார்.. பிறகு அதிலிருந்து விடுபட்டு விட்டார்.
இப்பது காதில் பேசுவதன் மூலம் சம்பந்தப்பட்ட நபர் வசியப்படுத்திவிடுவார்கள்.. பிறகு அவர்களை வேறு திசைக்கு திருப்புவார்கள்.. தனிமையில் இருப்பதால், இப்படி யாரோ பேசுவது போல கேட்டுக் கொண்டேயிருக்கும். அது பேயா, பிசாசா, அசரீரியா என்றெல்லாம் தெரியாது.. சுருக்கமாக சொல்லப்போனால், மனநிலை பாதிப்புக்கு முந்தின நிலைமைக்கு ஸ்ரீ சென்றுவிட்டார். ஆனால், பலரும் ஸ்ரீ யை பற்றி தவறான தகவல்களை பரப்புகிறார்கள்.
அதெல்லாம் கற்பனை
வடநாட்டுக்கு சென்று பெண்ணாக மாறிவிட்டதாககூட சொல்கிறார்கள்.. அதெல்லாம் தப்பு.. இன்றைக்கு சோஷியல் மீடியாவில் பரவிவரும் அவரது படங்களில் ஒன்றிரண்டு மட்டுமே உண்மை.. மற்றதெல்லாம் மிகைப்படுத்தி AI மூலம் செய்யப்பட்டிருக்கிறது..
அதேபோல, சில யூடியூபர்களும், பரபரப்பான செய்திகளை தர வேண்டும் என்பதற்காக, அதீதமாக கற்பனையை ஸ்ரீ பற்றி சொல்லிவிடுகிறார்கள். எனினும், ஸ்ரீ தற்போது இயல்பாக இல்லை.. இத்தனை காலம் தனிமையில் இருந்துவிட்டு, திடீரென வெளியே வந்தால் நெகட்டிவ் அப்ரோச் வந்துவிடும்.. எனவே, அந்த நோயிலிருந்து தற்போது விடுபட்டு கொண்டிருக்கிறார்..
சம்பளம் தரப்படவில்லையா?
தன்னை மறந்த சூழ்நிலையில் இருந்ததால், தலை முடியெல்லாம் வளர்த்துவிட்டிருக்கிறார்.. நேரத்துக்கு சாப்பிடாததால் ஒல்லியாகிவிட்டார்.. மற்றபடி அவர் நல்லாவே இருக்காரு.. விரைவில் சினிமாவிலும் நடிக்கலாம். ஆனால் தயாரிப்பாளர்கள் அவருக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.
சம்பளம் தராததால் ஸ்ரீ இப்படியாகிவிட்டதாக சொல்கிறார்கள். ஆனால், அதை சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர் மறுக்கிறார்.. ஸ்ரீ எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை.. அதனால்தான் சம்பளம் தர முடியவில்லை என்கிறார்.. மொத்தமாக பணத்தை தரலாம் என்று நினைத்தார்களா? அல்லது ஸ்ரீ காணாமல் போனதால்தான் சம்பளம் தரப்படவில்லையா தெரியவில்லை.. ஆனால் அந்த குற்றச்சாட்டை தயாரிப்பாளர் மறுக்கிறார்" என்றார்.












Click it and Unblock the Notifications