அடப்பாவி....காதலி போன் வந்துச்சு....பொண்டாட்டி ஜனனியை நினைக்காம ஆஃபீஸ்ல தங்கிட்டானே....!
சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் திருமணம் சீரியல் சந்தோஷ் மாதிரி கணவன் கிடைச்சா மனைவிமார்கள் கதி அவ்ளோதான்.
சக்தின்னு ஒரு பொண்ணை காதலிச்சு இருக்கான் சந்தோஷ். ஆனா,கல்யாணத்துக்கு அவங்க வீட்டுலசம்மதிக்கலை.அதனால,சந்தோஷின் நிலைமை எதுவும் தெரியாமல் அவங்க அப்பா ஜனனியை கல்யாணம் பண்ணி வச்சுடறாங்க.
கல்யாணத்து அன்னிக்கே சந்தோஷ் ஜனனிகிட்ட டைவர்ஸ் பத்தி பேசிடறான்.உள்ளுக்குள் உடைஞ்சு போறா ஜனனி.ஆனா,வெளியில காமிச்சுக்கலை.

ஒரே அறையில்
கல்யாணமான ஒரு ஆணும்,பெண்ணும் ஓர் வீட்டில் வாழ்ந்தாலும்,ஒரே படுக்கையில்படுத்து கொண்டாலும்... ஒருவருக்கு ஒருவரின் நடத்தைகள் பிடிச்சு போகும்தானே...அப்படித்தான் ஜனனியை கொஞ்சம் கொஞ்சமாக சந்தோஷுக்கு பிடிச்சுப் போகுது. அவ்வப்போது ஜனனியை ரசிக்கிறான்... ஆனா,ஜனனி உள்ளுக்குள் ஆசைப்பட்டு விடக்கூடாது என்பதில் கவனமா இருக்கான்.

ஆசை ஜனனிக்கு
ஜனனிக்கு சந்தோஷ் மேல ஆசை இருக்கு.இந்த வாழ்க்கை இப்படியே அமைந்து விடாதா என்கிற ஏக்கமும் இருக்கு. ஆனா,அதை வெளியில் காட்டிக்காம என்னவோ விட்டுக் கொடுப்பது போல அநியாயத்துக்கு பொறுமையா இருக்கா.ஆனா,வீட்டுக்குள்ள ஒரு நல்ல மருமகளா வாழ்ந்துகிட்டு இருக்கா.

ஜனனியை சந்தோஷ்
ஜனனியை சந்தோஷ் ஒரு நாள்நெருங்கி அவளது கண்களில் முத்தமிடுகிறான்.அடுத்து கன்னத்தில்..அடுத்து இதழ்களில் முத்தமிட நெருங்கும்போது சக்தியின் போன் வருது. வெளியில் போய் போன் பேசினவன் அப்படியே வெளியில் போனவன்தான்... வீட்டுக்கு லேட்டா வந்து ஹாலில் படுத்துக்கறான்.. ஜனனியின் முகத்தை பார்த்து பேச மறுக்கிறான்.

நோ படுக்கை வீட்டில்
காதலி சக்தி போனில் என்னை மறந்துட்டியா சந்தோஷ்.. எப்போ என்னை வந்து கூட்டிட்டு போவேன்னு கேட்க... பொறுத்துக்கோ சக்தின்னு சொல்லி சமாளிக்கிறான். ஏன் என்கிட்டே பேசலைன்னு கேட்க..ஜனனி என் கூட ரூம்லதான் இருக்காங்கன்னு சொல்றான். அதனாலதான் பேச முடியலைன்னும் சொல்றான்.

வேஸ்ட் ஜனனி
இனிமேல் வீட்டில் படுக்காம ஆஃபீஸ்ல படுத்துக்கலாம்னு . முடிவு பண்றான்.ஜனனியின் போனை எடுக்க மாட்டேன்றான்..ஆனா,ஜனனி இவருக்கு என்னாச்சுன்னு குழம்பி..கடவுளேஅவர் மனசுக்கு பிடிச்ச சக்தியோடு அவரை சேர்த்து வச்சுடுன்னு வெண்டிக்கறா... தமிழ் பொண்ணுங்க இப்படியா இருப்பாங்க...இப்போ ஜனனி வேஸ்டுன்னு தோணுது.












Click it and Unblock the Notifications