அடடே எல்லாமே தெரியுதே.. ஜூம் செய்து பார்க்கும் ரசிகர்கள்!
சென்னை: சீரியல்களில் பிஸியாக இருப்பது போலவே இன்ஸ்டாகிராமிலும் பெரும் ரசிகர் பட்டாளத்தையும் வைத்திருக்கும் சரண்யா துராடி தற்போது போட்டோஷூட் புகைப்படங்களை அப்லோட் பண்ணி வருகிறார்.
சரண்யாவுக்கென்று தனி ரசிகர் கூட்டம் உள்ளது. அவர் படு கவர்ச்சியாக போட்டோக்கள் போடுவதில்லை. ஆனால் சேலையில் விதம் விதமாக கொடுத்து ரசிகர்களை குளிர்வித்து விடுகிறார்.
இவருடைய புகைப்படங்களில் நாளுக்கு நாள் வித்தியாசங்களை காட்டி வருகிறார் .அதில் தற்போது இவர் விதவிதமான போஸ்களில் கொடுத்திருக்கும் போட்டோஸ்களும் கவர்ந்திழுத்து வருகின்றன.
மூச்சை விடுங்க ஷிவானி.. பலூன் வெடிச்சிற போகுது.. கலாய்க்கும் நெட்டிசன்கள்!
சேலையில் அழகோவியம்
அவர் சேலையில் இழுத்துப் போர்த்திக்கொண்டு போஸ் கொடுத்து இருந்தாலும் அதையும் ரசிகர்கள் உற்றுப் பார்த்து ரசித்து கமெண்ட்டுகளாக போட்டு வருகிறார்கள். நெஞ்சம் மறப்பதில்லை சீரியலில் டாக்டராகவும் தற்போது ஆயுத எழுத்து சீரியல் கலெக்டராகவும் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் நடிக்கும் சீரியல்களில் எப்பவுமே போல்டான கேரக்டரில் தான் இவர் நடித்துக் கொண்டிருக்கிறார்.
சூடு பிடிக்கும் சீரியல்
இதுவே இவரது ப்ளஸ் பாய்ண்ட் ஆக இருக்கிறது .இந்த சீரியலுக்கு பெரும் ரசிகர்கள் இருக்கிறார்கள் ஆனாலும் கிராமப்புறங்களில் சிலர் இவர் ஆயுத எழுத்து சீரியல் மாமியாருக்கு அடங்கி வீட்டிற்குள் அமைதியாக இருக்கும் சீன்களை ரொம்பவும் கலாய்த்து வந்தனர் .ஆனால் தற்போது இவர் அந்த சீரியலில் மறுபடியும் இவருடைய கேரக்டரை காட்ட ஆரம்பித்து இருக்கிறார்கள் அதனால் இந்த சீரியல் இப்போதுதான் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது.
காதலருடன் செம போஸ்
தற்போது இவர் இவரது காதலருடன் கொடுத்திருக்கும் போட்டோஸ் இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வந்து கொண்டிருக்கிறது .அது இருவரும் இணைந்து இன்ஸ்டாகிராமில் மேட்சிங் டிரஸ்சில் நோட்பேடில் எழுதிக்கொண்டு ஹெட்செட் மாட்டுவது போலவும் பல போட்டோஸ் எடுத்து இன்ஸ்டாகிராமில் போட்டு இருக்கிறார்கள். அதுவும் வைரலாக பரவி வருகிறது.
எப்போது கல்யாணம்
இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் இவரிடம் கல்யாணம் எப்போது என்று கேட்டு வருகிறார்கள். திருமண நாள் நெருங்கவும் இவரது முகத்தில் பளபளப்பும் திருமண களையும் வந்துவிட்டது என்றும் பல ரசிகர்களை இவரை வர்ணித்து வருகிறார்கள். மகிழ்ச்சி பூரிப்போடு இவரும் ரசிகர்களின் கண்களுக்கு பஞ்சம் அளிக்காமல் குளிர்ச்சியான போட்டோக்களாக எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் தட்டிவிட்டு வருகிறார்.
ஜூம் போடும் ரசிகர்கள்
பல ரசிகர்கள் இவர் போடும் போட்டோக்களை ஜூம் செய்து பார்க்கிறார்களாம். அதையும் பெருமையோடு சொல்லிக் கொள்கிறார்கள். திருமணத்திற்குப் பிறகு நடிப்பாரா என்றும் பலரும் கேட்டுக் கொண்டிருக்கும் போது இவர் அதற்கான சூழ்நிலை அமைந்தால் நடிப்பேன். ஆனால் நமக்கு லைஃப் லாங்க் இருக்கிறது நம்ம குடும்பமும் அதில் இருக்கும் சந்தோஷமும் தான். அதற்கு தான் எனது முழு கவனத்தையும் செலுத்துகிறேன்.
திருமணமானாலும் நடிப்பேன்
இது எனக்கு ஒரு வேலை மட்டும் தான். ஆனால் தான் அதற்கான வாய்ப்பு கிடைத்தால் திருமணத்திற்கு பிறகும் நடிப்பேன் என்றும் கூறியிருக்கிறார் எனக்கு முழு சப்போர்ட்டாக எனது குடும்பம் இருந்து கொண்டு இருப்பதால் தற்போது தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறேன் .ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் இருப்பது போல ஒரு பெண்ணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு ஆண் இருக்கவேண்டும் இருந்தால்தான் அந்த பெண்ணால் சாதிக்க முடியும் என்றும் கூறியிருக்கிறார். சபாஷ் சரியான பேச்சு.