மனோஜால் ரோகிணிக்கு வந்த பிரச்சனை.. அண்ணாமலை சொன்ன பதில்.. மீனா இப்படி பேசிட்டாங்களே?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் மார்ச் ஐந்தாம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்று இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் சிட்டியால் தான் முத்து காரை விற்றார் என்ற உண்மை தெரிய வந்ததும் மீனா சிட்டி ஆபீசுக்கு சென்று சிட்டியை மிரட்டி இருக்கிறார்.

அதே நேரத்தில் மனோஜ் பார்க் நண்பரிடம் கடன் வாங்கி இருக்கும் விஷயம் ரோகிணிக்கு தெரிய வருகிறது. அந்த கோபத்தில் ரோகினி சில உண்மைகளை உளறிவிட அதனால் மனோஜ்க்கு சந்தேகம் வருகிறது. இந்த நிலையில் இன்று என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

Siragadikka aasai march 5th Episode and promo full update

அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் மீனா முத்து செட்டுக்கு வந்து செல்வத்திடம் முத்து எதற்காக காரை விற்றார் என்று கேட்க அதற்கு முத்து சிட்டியால்தான் முத்து காரை விற்றார் என்று உண்மைகளை சொல்கிறார். தங்களுக்காக முத்து சப்போர்ட் பண்ணுவதற்காக சிட்டி செய்த பிரச்சனைகளை சொல்ல அதனால் கோபமான மீனா நேராக சிட்டி ஆபீசுக்கு வருகிறார்.

Siragadikka aasai march 5th Episode and promo full update

அங்கு சிட்டியை அவமானப்படுத்தி திட்டுகிறார். அதோடு என் புருஷன் உன் காலில் விழனுமா? இதோடு நிறுத்திக்க திரும்பவும் அவர்கிட்ட ஏதாவது பிரச்சனை பண்ணுன அவ்வளவுதான். அவர் அமைதியா இருக்காரோ இல்லையோ நான் உன்னை நடுரோட்டில் வைத்து செருப்பால அடிப்பேன் என்று திட்டி விட்டு அங்கிருந்து போக அதனால் சிட்டி கோபமாகி அங்கிருக்கும் அடியாள்களிடம் இனி இவ அவா புருஷன் முத்துவோடு சேர்ந்து வாழக்கூடாது என்று சொல்ல அதற்கு அவர்கள் நாம என்ன பண்ண என்று கேள்வி கேட்கின்றனர்.

Siragadikka aasai march 5th Episode and promo full update

அதற்கு சிட்டி அதுதான் சத்யா நம்ம பக்கம் இருக்கால்ல அவனை வச்சு முத்து மீனா வாழ்க்கையில் விளையாடி இருவரையும் பிரிக்கணும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அடுத்த கட்டத்தில் மனோஜ் ரோகினி இடம் கனடா வேலை பற்றி பேசிக் கொண்டிருக்க அந்த நேரத்தில் பார்க்கில் மனோஜ்க்கு பணம் கொடுத்த நண்பர் வீட்டுக்கு வந்து மனோஜை மிரட்டி கடன் வாங்கிய விஷயத்தை சொல்ல ரோகிணி இதைக் கேட்டு அதிர்ச்சி ஆகிறார்.

அதோடு பார்க் நண்பர் எனக்கு சீக்கிரமா பணத்தை செட்டில் பண்ணனும் என்று மிரட்டி விட்டு போக ரோகிணி இன்னும் என்னெல்லாம் என்கிட்ட மறைத்து வைத்திருக்கிறா? யாரெல்லாம் என்ன பணம் கேட்டு டார்ச்சர் பண்ணுவீங்க என்று கோபப்படுகிறார். ஒரு பக்கத்தில் விஜயா ரோகினியிடம் பணம் கேட்டுக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் ரோகிணியை பிஏவும் பணத்திற்காக மிரட்டிக் கொண்டிருக்கிறார்.

Siragadikka aasai march 5th Episode and promo full update

இப்போது மனோஜ் கடன் வாங்கி வைத்திருக்கும் நபரும் வீட்டுக்கே வந்து விட இதை நினைத்து ரோகினி கோபப்படுகிறார். அப்போது மனோஜ் உன்கிட்ட வேற யாரு பணம் கேட்கிறா? என்று கேட்க அதற்கு ரோகிணி என் முகத்திலேயே முழிக்காத என்று திட்டி விட்டு ரூமுக்குள் சென்று விடுகிறார். அடுத்த கட்டத்தில் மீனா வரும் வழியில் சீதாவை பார்த்து முத்து கார் விற்றது சிட்டி செய்த வேலைதான் என்று எல்லாவற்றையும் சொல்கிறார்.

Siragadikka aasai march 5th Episode and promo full update

அதோடு சத்யாவை அவன் கூட சேர விடக்கூடாது என்று சொல்லிவிட்டு வருகிறார். பிறகு வீட்டுக்கு வந்ததும் அண்ணாமலை இடம் நடந்த விஷயங்களை சொல்ல அவர் என்கிட்ட சொன்ன விஷயம் முத்துவுக்கு தெரிய வேண்டாம். அவன் எது பண்ணுனாலும் அதுல ஒரு நியாயம் இருக்கும். இதுல வேற ஏதோ காரணம் இருக்கு என்று எனக்கு தோணுகிறது என்று சொல்ல அந்த நேரத்தில் வீட்டிற்கு முத்து வருகிறார். அதனால் அண்ணாமலை பேச்சை நிறுத்தி விடுகிறார்.

பிறகு மீனா முத்துவிடம் தனியாக பேசும்போது என்கிட்ட எதுக்கு இந்த விஷயத்தை சொல்லல என்று கேட்க அதற்கு முத்து என்ன விஷயம் தெரிஞ்சு என்று குழப்பம் அடைகிறார். அதற்கு மீனா, காரை விற்பதற்கு அந்த சிட்டி தான் காரணம்னு எனக்கு தெரியும் என்று சொல்ல ஓ அப்படியா என்று நிம்மதி அடைகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+