அப்போ பிடிச்சது இப்போ பிடிக்கலை போல...!
சென்னை: சன் டிவியில் ராதிகாவின் செல்லமே சீரியல் வரையிலுமான வாழ்நாள் சாதனையாளர் விருதை பெறும்போது காவேரி கலாநிதி மாறனுக்கு ராதிகாவின் அனைத்து சீரியல்களும் பிடிக்கும் என்று கலாநிதி மாறன் சொன்னதாக ராதிகா கூறினார்.
அப்போது காவேரி கலாநிதி மாறனுக்கு பிடித்த ராதிகாவின் சீரியல்கள் இப்போது பிடிக்காமல் போனது ஏனோ என்று நமக்கு கேள்வி கேட்க தோன்றாமல் போகுமா என்ன?
சன் டிவியின் முக நூல் பக்கத்தில் பழைய நினைவுகளின் தொகுப்பை வெளியிட்டு சன் நெக்ஸ்ட் ஆப்பில் கண்டு மகிழுங்கள் என்று அறிவுறுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளது.
சித்தி அண்ணாமலை
சித்தி சன் டிவியில் ஒளி பரப்பான முதல் வெற்றி சீரியல் என்று கூட சொல்லலாம். அந்த அளவுக்கு வெற்றியை எந்த சீரியலும் தொடவில்லை. சிகரம் தோட்ட சீரியல் என்று சொன்னால் அது மிகை அல்ல. அதன் பிறகு அண்ணாமலை, செல்வி என்று ஒளிபரப்பாகி செல்லமே வந்த நேரத்தில் சன் டிவி விருது வழங்கும் விழா நடத்தியது.
Pandian Stores Serial: ஆனந்தம் பாணியில் பயணிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ்
ராதிகாவுக்கு விருது
வாழ்நாள் சாதனையாளர் விருது என்று ராதிகா சரத்குமாருக்கு விருது ஒன்றை அறிவித்தார்கள். அப்போது சன் டிவியின் வளர்ச்சிக்கு இவரும் ஒரு காரணம் என்று நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய நடிகை கஸ்தூரி கூறி இருந்தார். தயாரிப்பாளர், கிரியேட்டிவ் ஹெட் என்று இவர் எடுத்த அவதாரம் வீண் போகவில்லை, வெற்றியை வாரிக் குவித்தது என்றும் கூறினார்.
ராதிகாவின் சீரியல்
வாழ்நாள் சாதனையாளர் விருதை ராதிகா சரத்குமார் காவேரி கலாநிதி மாறன் கையால் பெறுகையில், கலாநிதி மாறன் சொல்வார்... உன்னோட சீரியல்கள் காவேரிக்கு ரொம்ப பிடிக்கும் என்று. அவ்வப்போது சீரியல்களை பார்த்து எனக்கு போன் செய்து பேசுவது காவேரிதான் என்று சொல்வார் என்றும் ராதிகா சொன்னார்.
சீரியல் இப்போது?
அது சரி..கலாநிதி மாறன்.. அப்போது பிடித்த ராதிகா சரத்குமாரின் சீரியல்கள் இப்போது பிடிக்காமல் போனதால்தான் நிறுத்தி விட்டீர்களா?ராதிகாவின் சீரியல்கள் பிடித்த ரசிகர்களுக்கு நீங்கள் என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்? ரசிகர்களுக்குத்தானே டிவி? இல்லை உங்களுக்கா?