Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆண் பாவம் படத்தில் கொல்லங்குடி கருப்பாயியை நடிகர் பாண்டியராஜன் நடிக்க வைத்தது ஏன்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆண்பாவம் படத்தில் நடிகர் பாண்டியராஜன், கொல்லங்குடி கருப்பாயியை நடிக்க வைத்தது ஏன் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். இவர் புகழ் பெற்றது எப்படி என்பதையும் தெரிந்துகொள்ளலாம்.

இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் கூறியிருப்பதாவது: பாண்டியராஜனின் படங்கள் வந்த புதிதில் ஒரு Subtle காமெடி இருக்கும். அதை எடுத்துட்டா படத்துல ஒண்ணுமே இருக்காதோன்னு தோணும். அவர் படங்களில் ஆண்பாவம் அழகான படம். மனைவி ரெடி படத்தில் அவரோட அந்த காமெடி ஃப்ளேவர் குறைஞ்சதாலும் கதையும் இல்லாததாலும் சுமாராத்தான் போச்சு.

pandiyarajan

பிறகு வந்த 'ஏட்டிக்கி போட்டி' படம் முழுக்க பாண்டியராஜன் ஸ்டைல் காமெடி இருந்தும் அந்தப் படம் ஏன் ஓடலைன்னு தெரியல. அவர் ஒரே மாதிரி டெம்ப்ளேட்டா சில காரியம் செய்தது ரசிகர்களுக்கு பிடிக்கலையோன்னு தோணுது.

பாட்டிகளை வைத்து காமெடி செய்வது பாண்டியராஜனுக்கு ரொம்ப இஷ்டம். அதனால் தான் விருதாம்பாள் பாட்டியோடு பாண்டியராஜனின் இந்த மணமக்கள் ஸ்டில் அன்று புகழ் வாய்ந்த ஒன்று.
அது குருநாதர் பாக்யராஜிடமிருந்து வந்திருக்கலாம். பாக்யராஜ் தூறல் நின்னு போச்சு படத்தில் மீனாட்சிப் பாட்டியை வைத்து செமயா சிரிக்க வைத்திருப்பார். துணை நடிகையாயிருந்த மீனாட்சிப் பாட்டி அறியப்பட்ட நடிகையானது பாக்யராஜால் தான்.

பாண்டியராஜன் ஆண்பாவம் படத்தில் கொல்லங்குடி கருப்பாயி என்கிற நாட்டுப்புற பாடகியை அறிமுகப்படுத்தினார். கொல்லங்குடி என்கிற கிராமத்தில் பிறந்த கருப்பாயி வயல்வேலை செய்யும் போது பாடி பழகி அடுத்தடுத்த ஊர்களில் பாடி புகழ்பெற்றார்.

இவரை பேட்டிக்கண்ட ஆல் இந்தியா ரேடியோ பின்னர் இவரை நிரந்தரப் பாடகியாக்கியது. அதன் பின் சினிமாவில் அறிமுகமாக பணம், புகழ் வந்தது. ஆனால் எதிர்பாராவிதமாக ஒரு பாட்டு ரெக்கார்டிங் போகும் போது கருப்பாயியின் கணவர் அவர் கண்முன்னே இறந்துபோக கருப்பாயி படுத்த படுக்கையானார். மகளும் ஒரு விபத்தில் இறக்க கருப்பாயி சில இளைஞர்கள் உதவியால் வாழ்கிறார். கலைமாமணி அவர்.

பாண்டியராஜனின் காமெடி தனித்துவமாக போய்க் கொண்டிருந்த போது வெளி இயக்குனர்களின் படத்தில் நடிக்கத் தொடங்கியது பாண்டியராஜனின் தனித்துவத்தை கூர் மழுங்கச்செய்து விட்டது. வெளி இயக்குனர்கள் வழக்கமான சண்டை ஹீரோவாக அவரை மாற்றி விட்டனர்.

விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி எடுத்த ஜாடிக் கேத்த மூடி படம் பாண்டியன், பாண்டியராஜன் நடிக்க ஆவலோடு மற்றொரு ஆண்பாவம் எனப் பார்க்கச் சென்ற படம். ஆனால் வரதட்சணை கொடுமை என நம்மை கொடுமை செய்துவிட்டார்கள். விஷால் மற்றும் அவர் சகோதரர் விக்ரம் சிறுவர்களாக இந்தப் படத்தில் ஒரு பாடல் காட்சியில் பாண்டியராஜனோடு நடித்தார்கள்.

மலையாள காமெடிகளான நாடோடிக் காற்று(கதாநாயகன்), மேலே பரம்பில் ஆண்வீடு(வள்ளி வரப்போறா), நின்னிஷ்டம் என்னிஷ்டம்(நீலக்குயில்), மழவில் காவடி(சுப்ரமண்ய சாமி) போன்ற படங்கள் ஒரிஜினல் காமெடியும் இல்லாமல் பாண்டியராஜனின் ஸ்டைல் காமெடியும் இல்லாமல் சிதைந்து போயின.

பாக்யராஜ் அவருக்கு எழுதிய தாய்க்குலமே தாய்க்குலமே படத்தில் பாண்டியராஜனை நடிக்க வைத்த போது அது பாக்யராஜை பிரதிபலிப்பதாகவே இருந்தது. கதையால் அப்படம் வெற்றி பெற்றது. பாண்டியராஜனின் இந்த மாற்றங்கள் அவரை வீழ்த்திவிட்டன எனச்சொல்லலாம். அவரிடம் இருந்த அழகான காமெடிசென்ஸ் இயக்குனர் எங்கோ மறைந்தே போய்விட்டார்.


ஆண்பாவம் வீட்டில் வி.கே.ராமசாமி, பாட்டி, பாண்டியராஜன் சகோதரர்கள் பேசிக்கொள்வதெல்லாம் அட்டகாசமான காட்சிகள். ஜனகராஜின் ஹோட்டல் காமெடி இப்போதும் வயிறு வலிக்க சிரிக்க வைத்தவை. உதவி இயக்குனர் ரமேஷ்கன்னா என்பதும் சிறப்பு.
எனக்குத் தெரிந்து அடுத்தடுத்த படங்களில் வேறு வேறு இயக்குனர்களோடு நடித்த நடிகர்களில் முரளிக்குப்பின் பாண்டியராஜன் இருப்பார்.

அது கூட வீழ்ச்சிக்கு காரணமாகலாம்.
ஆனால் காமெடி என்றால் பாண்டியரஜனை ஒதுக்கி வைத்து விட்டு எழுத முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+