யாஷிகா கொண்டையில் மல்லிகைப் பூவு.. வச்ச கண் வாங்காமல் பார்க்கும் ரசிகர்கள்!
சென்னை: கவர்ச்சி நாயகி யாஷிகா வெளியிட்ட புகைப்படம் தான் இப்போ இணையதளத்தில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது .
ஆனால் என்ன காமெடின்னா நல்லா ஜொள்ளு விட்டு ரசிச்சுட்டு,, இப்படியா போஸ் கொடுப்பீங்கன்னு சவுண்டு வேற விடுகிறார்கள் ரசிகர்கள்.
ஆனால் யாஷிகா இதையெல்லாம் கண்டு கொள்வதாகவே இல்லை. அவர் பாட்டுக்கு போய்க் கொண்டே இருக்கிறார். நான் கவர்ச்சியாதான் இருப்பேன். பிடிச்சா பாருங்க, இல்லாட்டி போங்க என்பதுதான் அவரது பாலிசி.

முரட்டுக் குத்து
நடிகை யாஷிகா ஆனந்த் இருட்டு-அறையில்-முரட்டு-குத்து என்ற படம் மூலமாக தமிழ் சினிமாவில் பிரபலமானவர். இந்த படத்திற்கு முன்பு சில படங்களில் சின்ன சின்ன ரோலில் நடித்து இருந்தாலும் எதுவும் அவ்வளவு பெரிய ஹிட் கொடுக்கவில்லை. முரட்டுக் குத்துக்குப் பிறகுதான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

பஞ்சமே இல்லாத கவர்ச்சி
புதுப்புது நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்துவதில் முதலிடத்தில் இருக்கும் விஜய் டிவியில் கவர்ச்சிகரமான நிகழ்ச்சிகளுக்கு பஞ்சமே இல்லை. அந்த மாதிரிதான் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தினாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுபவர்கள் போடும் டிரஸ் எல்லாமே கவர்ச்சியாக தான் இருக்கிறது.

மொய்த்துத் தள்ளுகிறார்கள்
இருந்தாலும் இதை பார்ப்பதற்காகவே ரசிகர்கள் மொய்ப்பது வழக்கம். கமல்ஹாசன் இன்னொரு முக்கியக் காரணம். இதில் கலந்து கொள்வதற்கு வாய்ப்பு வந்ததும் உடனே ஒப்புக் கொண்டாராம் யாஷிகா. இன்ஸ்டன்ட் பிரபலம் ஆகலாம் என்பதுதான் முக்கியக் காரணம். 100 நாட்கள் அந்த வீட்டுக்கு உள்ளே இருக்கும்போது ரசிகர்களின் மனதிலும் பசை போல ஒட்டி விடலாம் என்று கருதி தான் அதில் கலந்து கொண்டார்.

பிக்பாஸ் பிரபல்யம்
ஆனால் 100 நாட்களை இவரால் முடிக்க முடியவில்லை. மாறாக, 98 நாட்கள் இருந்தார். இவர் ஐந்தாவது இடத்தைப் பிடித்து வெளியேறினார். அதற்காக இவருக்கு கிடைத்த சன்மானம் ரூ. 5 லட்சம் என்று சொன்னார்கள். அதுமட்டுமல்ல உள்ளே இருக்கும்போது சில போட்டிகளில் வென்றதற்காக இரண்டு லட்ச ரூபாயும் கிடைத்திருக்கிறது .அதற்கு பின்னர் 2019-ல் ஒளிபரப்பப்பட்ட விஜய்யின் ஜோடி அன்லிமிட்டட் நிகழ்ச்சியில் வழிகாட்டியாக தோன்றினார்.

கவர்ச்சிக்கு பச்சைக் கொடி
இப்போ இவரது கைவசம் இவர் எதிர்பார்த்த அளவு படங்கள் இல்லாததால் இணையதளத்தில் தனது கவனத்தை செலுத்தி இருக்கிறார். இணையதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் மொட்டைமாடி போட்டோக்களையும் தவறாமல் எடுத்து பதிவிட்டு கொண்டிருக்கிறார். பல புகைப்படங்கள் கவர்ச்சிதான். ஆனாலும் அதுதான் என்னோட அடையாளம் என்பது போல கேஷுவலாக இருக்கிறார் யாஷிகா.

கண்ணுக்கு விருந்து
ஒர்க்கவுட் பண்ணுற போட்டோக்களையும் தன்னுடைய உடல் அங்கங்கள் தெரியிற அளவுக்கு ரசிகர்களுக்கு விருந்து படைத்திருக்கிறார். இப்போ இதெல்லாம் அவுட் ஆஃப் ஃபேஷன் என்று சொல்லுமளவுக்கு படுக்கை அறையிலும் வெஸ்டர்ன் ஆடையில் மல்லிகை பூவை வைத்துகொண்டு போட்டோ எடுத்து அதனை இணையதளத்தில் பதிவிட்டிருக்கிறார். சும்மா சொல்லக் கூடாது.. லேட்டஸ்ட் போட்டோவில் வேறு லெவலில் இருக்கிறார்.

கொண்டையில் மல்லிப் பூ
நல்ல மாடர்ன் டிரஸ். தூக்கிச் செருகிய கொண்டை.. அதில் அழகாக நம்ம ஊரு வாசமான மல்லிகைப் பூ.. இந்த மாதிரி நேரத்துல இப்படியெல்லாம் டிரஸ் போட்டுக்கிட்டு தலை நிறைய மல்லிகை பூவை வைத்துகொண்டு போஸ் கொடுத்தால் எப்படி சும்மா இருக்க முடியும். கிளர்ந்தெழுந்து வந்து விட்டனர் ரசிகர்கள்.. வச்ச கண்ணு வாங்காம ரசித்துத் தள்ளிக் கொண்டுள்ளனர். சிலர் கிண்டலடிக்க பலர் பாராட்ட.. இப்படி கமகன்னு போய்ட்டிருக்கு யாஷிகாவின் லேட்டஸ்ட் அலப்பறை.












Click it and Unblock the Notifications