சிறிய வார்டாக இருந்தாலும் கேரள அரசியலில் முக்கியத்துவம் பெற்ற கால்யாட் வார்டு.. அப்படி என்ன இருக்கு?

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: காசர்கோடு மாவட்டத்தில் பெரிய பஞ்சாயத்தில் உள்ள மிகச் சிறிய வார்டான கால்யாட்டில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது.

கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் 8, 10, 14 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக நடைபெற்றன. இதற்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆகியவை போட்டியிட்டன.

தவிடுபொடி

தவிடுபொடி

இந்த மாநிலத்தில் ஆளும் கட்சி மீது தங்கக் கடத்தல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதையே தங்கள் தேர்தல் பிரசாரங்கள் மற்ற இரு கட்சி கூட்டணிகளும் முன் வைத்தன. ஆனால் அவை அத்தனையையும் தவிடுபொடியாக்கிவிட்டது இந்த தேர்தல் முடிவுகள்.

இடதுசாரி ஜனநாயக கூட்டணி

இடதுசாரி ஜனநாயக கூட்டணி

ஆம்! இந்த தேர்தலில் ஆளும் கட்சி கூட்டணியான இடதுசாரி ஜனநாயக கூட்டணி பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. கேரளா அரசியலில் பெரிதாக பேசப்பட்டது காசர்கோடு மாவட்டம், பெரிய பஞ்சாயத்தில் உள்ள கால்யாட் என்ற சிறிய வார்டு.

அரசியல்

அரசியல்

இதற்கு காரணம் இளைஞர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சரத் மற்றும் கிரிபேஷ் லால் ஆகிய இருவரையும் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடந்த ஆண்டு கொலை செய்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சம்பவம் மாநில அரசியலில் அதிகம் பேசப்பட்டது.

வெற்றி

வெற்றி

இதை காங்கிரஸ் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டது. இதன் விளைவு இன்று கால்யாட் வார்டை கைப்பற்றியது. இது போல் ஓரிரு வெற்றிகளை தவிர்த்து காங்கிரஸ் கட்சி கேரளாவில் பெரிய அளவில் எடுபடவில்லை என்றே தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+