Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிளம்பிய ஜேஎன்.1 வைரஸ்.. கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பது ஏன்? காரணம் இதுதான்!

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா பாதிப்பு என்பது திடீரென்று அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 1,039 பேர் பாதிக்கப்பட்டனர். இதனால் கேரளா அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கையை மீண்டும் தீவிரப்படுத்தி உள்ளது. இத்தகைய சூழலில் தான் கேரளாவில் திடீரென்று கொரோனா பாதிப்பு அதிகரிப்பதன் பின்னணி காரணம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

சீனாவில் இருந்து கடந்த 2019 ம் ஆண்டில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. இந்தியா உள்பட உலகின் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியது. இதனால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர். பல நாடுகளில் மக்கள் கொத்து கொத்தாக பலியாகினர்.

How Keralas Covid-19 Cases increases? What is JN.1 Corono Virus? details here

கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் ஒட்டுமொத்த உலகமும் முடங்கியது. மேலும் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டது. இதையடுத்து 2 ஆண்டுகள் கழித்து 2021ல் உலகம் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பியது.

இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு என்பது லட்சத்தில் இருந்து படிப்படியாக குறைந்து கட்டுக்குள் வந்தது. இந்நிலையில் தான் திடீரென்று தற்போது கேரளாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு என்பது அதிகரிக்க தொடங்கி உள்ளது. அதாவது மத்திய அரசு நேற்று வெளியிட்ட தரவுகளின் படி இந்தியாவில் கொரோனாவால் 1,185 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதில் கேரளாவில் மட்டும் 1,039 பேர் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் கேரளாவில் கொரோனா பரவல் திடீரென்று அதிகரித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதனால் அந்த மாநிலத்தில் கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக பரிசோதனைகள் என்பது அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு தேவையான மாத்திரை, மருந்துகள் இருப்பு வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதோடு பொதுமக்கள் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கைகளை பின்பற்றவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே தான் கேரளாவில் திடீரென கொரோனா பாதிப்பு என்பது அதிகரிப்பதற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது கேரளவாில் தற்போது ஓமிக்ரானின் ஜேஎன்.1 (JN.1) வகை வைரஸ் பரவுவது தான் பாதிப்பு திடீரென அதிகரிக்க காரணமாகி உள்ளது. இந்த ஜேஎன் 1 கொரோனா வைரஸ் என்பது ஓமிக்ரன் பிஏ.2.86 (BA.2.86)வகை மாறுபாடு கொண்ட வைரசாகும். இந்த வைரஸ் ஆகஸ்ட் மாதம் முதல் முதலாக ஐரோப்பிய ஒன்றியமான லக்சம்பேர்க்கில் கண்டறியப்பட்டது. அங்கிருந்து இது பிற நாடுகளுக்கு பரவ தொடங்கியது.

இதுபற்றி தொற்றுநோய் நிபுணரான டாக்டர் ஈஸ்வர் கிலாடா கூறுகையில், ‛‛இந்த வைரஸ் என்பது இதுவரை உலகளவில் 38 நாடுகளில் பரவி உள்ளது. இதனால் இது பழைய வைரஸ் தான். ஆனால் இந்தியாவுக்கு புதிதாக பரவி உள்ளது. இது மேல்சுவார வகை சார்ந்த பிரச்சனைகளை ஏற்படுத்தும். மேலும் சளி, இருமல், மூச்சுத்திணறலை ஏற்படுத்தும். தற்போதைய சூழலில் ஐசியூ படுக்கை, வெண்டிலேட்டர் சிகிச்சையில் யாரும் இல்லை. அதிர்ஷ்டவசமாக இறப்புகளும் ஏற்படவில்லை. இதனால் நாம் பயப்பட வேண்டாம். ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை நாம் கடைப்பிடிக்க வேண்டும்'' என்றார்.

அதன்படி பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்லும்போது மாஸ்க் அணிதல், கைகளை அவ்வப்போது சுத்தம் செய்தல், கொரோனா பாதிப்புக்கான அறிகுறி இருந்தால் உடனே மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்வது, அறிகுறி உள்ளவர்களை விட்டு விலகி இருப்பது உள்ளிட்டவற்றை மக்கள் பின்பற்ற வேண்டும் என டாக்டர்கள் அறிவுரை வழங்கி உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+