வேளாண் சட்டங்களை அமல்படுத்த மாட்டோம்.. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம்.. கேரளா அறிவிப்பு
திருச்சூர்: கேரள அரசு சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை அமல்படுத்தாது, விவசாயிகளுக்கு எதிரான இந்த சட்டங்களுக்கு எதிராக இந்த வாரத்திலேயே உச்சநீதிமன்றத்தை நாடுவோம் என்று அம்மாநில வேளாண் அமைச்சர் வி.எஸ்.சுனில்குமார் தெரிவித்தார்.
அண்மையில் நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி நாடு முழுவதும் விவசாய அமைப்பினர் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
குறிப்பாக பஞ்சாப்,ஹரியானா, உத்தரப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநில விவசாயிகள் பல்லாயிரம் பேர் டெல்லியில் முகாமிட்டு 12 நாட்களுக்கு மேலாக கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் போராடி வருகிறார்கள். மத்திய அரசு விவசாய சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதுவரை நடந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டவில்லை. நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

ரத்து செய்வீர்களா
விவசாயிகளின் கோரிக்கை ஒன்றை கோரிக்கையாக உள்ளது. அதாவது அதாவது சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வீர்களா இல்லையா என்ற ரீதியில் மட்டுமே உள்ளது. அதற்கு அரசிடம் ஆம், இல்லை என்ற பதிலை மட்டுமே எதிர்பார்க்கிறார்கள். இதனால் எந்த முடிவும் எட்டப்படாமல் உள்ளது.

பந்த்
இதனிடையே மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பத்துக்கும் மேற்பட்ட மத்திய தொழிற்சங்கங்களும் 300 க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர் அமைப்புகளும் இன்று பாரத் பந்த் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், பஞ்சாப், ராஜஸ்தான் உள்பட பல்வேறு மாநிலங்களில் போராட்டத்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம்
இந்நிலையில் கேரள மாநில வேளாண் அமைச்சர் வி.எஸ்.சுனில்குமார் விவசாய சட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் இது தொடர்பாக அவர் கூறுகையில், "நாங்கள் விவசாய சட்டங்களை கேரளாவில் செயல்படுத்த மாட்டோம். மத்திய அரசு எடுக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் எதிர்கொள்ள மாநில அரசு தயாராக உள்ளது. இந்த சட்டங்களுக்கு எதிராக இந்த வாரத்திலேயே உச்சநீதிமன்றத்தைதை நாடுவோம் என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

பொதுவிநியோக முறை
மத்திய அரசின் வேளாண் சட்டம் என்பது அரசியலமைப்பால் உறுதி செய்யப்பட்ட. மாநில அரசுகளின் அதிகாரத்தைப் பறிப்பதாகும், நாட்டின் உணவுப் பாதுகாப்பையும் சுதந்திரத்தையும் பறிக்கும் புதிய சட்டங்கள், பெருநிறுவன நிறுவனங்களின் உணவு சந்தையை ஒப்படைக்கும், இது நமது பொது விநியோக முறையை அழிக்கும்" என்றார்.
-
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications