கொண்டாட்டமா இருப்பது தப்பில்லை.. கேரளாவில் பப்களை கொண்டு வரும் முதல்வர் பினராயி.. செம காரணம்!
Recommended Video
திருவனந்தபுரம்: கேரளாவில் அரசு சார்பாக விரைவில் பப்களை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் உணவு பிரியர்கள் அதிகம். பீப், போத்து தொடங்கி போர்க் வரை எல்லா வகையான உணவுகளை கலந்து கட்டுவார்கள். சமீப நாட்களாக அங்கமாலி டைரிஸ், ஜல்லிக்கட்டு போன்ற மலையாள படங்களும் உணவை மையமாக வைத்து வருகிறது.
அதேபோல் கேரளாவில் மதுபிரியர்கள் அதிகம். வீட்டில் இயல்பாக உட்கார்ந்து பீர் குடிப்பது பலரின் வீடுகளில் சாதாரணமாக நடக்கும் விஷயம் .

பப் வரும்
இந்த நிலையில்தான் கேரளாவில் அரசு சார்பாக விரைவில் பப்களை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். ஆம் அரசு சார்பாக இளைஞர்கள் கொண்டாட்டமாக இருக்க பப்கள் கொண்டு வரப்படும். விரைவில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று கூறியுள்ளார்.

என்ன காரணம்
இதற்கு அவர் காரணத்தையும் குறிப்பிட்டுள்ளார். அதில், மக்கள் கொண்டாட்டமாக இருப்பது தவறில்லை. எப்படி வாழ வேண்டும் என்பது அவரவர்களின் விருப்பம். ஐடி ஊழியர்களுக்காக இந்த பப்கள் கொண்டு வரப்படும். இதற்கு கட்டணம் வசூலிக்கப்படும்.

பல புகார்
மலையாளிகள் பலர் உலகம் முழுக்க வேலை பார்க்கிறார்கள். அங்கிருக்கும் பப் வசதிகள் கேரளாவில் இல்லை என்று புகார் வைக்கிறார்கள். பலர் இது தொடர்பாக கடிதம் அனுப்பி இருக்கிறார்கள். இந்த புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கிறோம்.

மதுக்கடைகள் சரி செய்யப்படும்
அதேபோல் கேரளாவில் அரசு நடத்தும் பெவ்கோ எனப்படும் அரசு பார்கள் சீக்கிரம் புனரமைக்கப்படும். இதன் மூலம் வருமானம் முறைப்படுத்தப்படும். தமிழ்நாட்டில் செயல்படவும் டாஸ்மாக் போல, இதன் செயல்பாடு சரி செய்யப்படும், என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications