நிறைய மாற போகிறது.. மிக மிக முக்கியமான விஷயம் பேசினோம்.. கேசிஆர் சந்திப்பிற்கு பின் பினராயி சூசகம்!
நேற்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுடன் நடந்த சந்திப்பு மிக மிக முக்கியமானது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
திருவனந்தபுரம்: நேற்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுடன் நடந்த சந்திப்பு மிக மிக முக்கியமானது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரள முதல்வர் பினராயி விஜயனை நேற்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்தித்தார். மத்தியில் காங்கிரஸ், பாஜக அல்லாத ஆட்சியை உருவாக்க இவர் திட்டமிட்டு இருப்பதாக செய்திகள் வருகிறது.

அதேபோல் இவர் இன்னும் சில தென்னிந்திய தலைவர்களை சந்திக்க உள்ளார். இந்த நிலையில் இந்த சந்திப்பு குறித்து பினராயி விஜயன் தற்போது பேட்டி அளித்துள்ளார்.
நாங்கள் நீண்ட நேரம் இந்திய தேசிய அரசியல் குறித்து பேசினோம். முக்கியமாக தற்போது இருக்கும் மத்திய அரசு குறித்து பேசினோம். மத்திய அரசு மாநில அரசுகளை இத்தனை நாட்கள் ஏமாற்றி வந்தது.
அது இனியும் நடக்காது. மாநிலங்களின் கட்டுப்பாட்டிலேயே இனி மத்திய அரசு இருக்கும். நாங்கள் மிக மிக முக்கியமான விஷயம் பேசினோம். நாங்கள் பேசியது தேசிய அரசியலில் நிறைய மாற்றங்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
சந்திரசேகர ராவை பொறுத்தவரை மத்தியில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று கூறினார். பாஜக, காங்கிரஸ் இரண்டு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று அவர் கூறினார். அதனால் மாநில கட்சிக்குத்தான் வாய்ப்பு அதிகம் உள்ளது.
ஆனால் நாங்கள் வேறு விஷயம் எதுவும் பேசவில்லை. பிரதமர் வேட்பாளர் குறித்து எந்த விதமான முடிவையும் நாங்கள் எடுக்கவில்லை, இவ்வாறு கேரள முதல்வர் பினராயி விஜயன் பேசி உள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications