ரயில்வே பணிகளில் தமிழக இளைஞர்கள் புறக்கணிப்பு- ஸ்டாலின் கடும் கண்டனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரயில்வே பணிகளில் மத்திய, மாநில அரசுகள் தமிழக இளைஞர்களுக்கு உரிய முன்னுரிமை வழங்காவிட்டால் இளைஞர்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

dmk president mk stalin statement about railway jobs allotment in tamilnadu

மதுரை ரயில்வே கோட்டத்தில் நடைபெற்ற ரயில்வே பணியிடங்களுக்கான தேர்வில் வட மாநிலத்தவர்கள் 90% பேர் தேர்வு செய்யப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சி தருவதாக கூறியுள்ளார். மத்தியில் பாஜக அரசு, தமிழகத்தில் பழனிசாமி அரசும் அமைந்த பிறகு தமிழக இளைஞர்களுக்கு தமிழகத்திலேயே வேலை கிடைப்பது கேள்விகுறியாக்கப்பட்டுள்ளதாக கூறியிருக்கிறார்.

அனைத்து பணியிடங்களிலும் வட மாநிலத்தவர்கள் திணிக்கப்படுவது இரட்டை வேதனை தருவதாக கூறியுள்ளார். திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் வேலைக்கு தேர்வு செய்யப்பட்ட 300 பேரில் ஒருவர் கூட தமிழர் இல்லைென்றும், தமிழர்களை புறக்கணிக்கும் விபரீத விளையாட்டை மத்திய பாஜக அரசு நடத்திக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

பிற மாநிலங்களில் இருந்து துணைவேந்தர்களை இறக்குமதி செய்ததில் தொடங்கி, இப்போது வடமாநில இளைஞர்களை தமிழகத்தில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் நிரப்பி விட வேண்டும் என்ற வஞ்ச்சக எண்ணத்துடன் மத்திய அரசு செயல்படுவது கவலை அளிப்பதாக கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+