வடநெம்மேலி பண்ணையின் 5 ஆண்டு ரகசியம்.. பார்வையாளர்களுக்கு முதல் முறையாக அனுமதி

Subscribe to Oneindia Tamil

மாமல்லபுரம்: சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரத்துக்கும், சென்னைக்கும் மத்திய பகுதியில் உள்ள வடநெம்மேலியில் மிகப்பெரிய முதலைப்பண்ணை அமைந்துள்ளது. இங்கு ஏராளமான முதலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் ராட்சத ஆமைகள், மலைப்பாம்புகளும் பராமரிக்கப்பட்டு வருகிறது. கடந்த 5 ஆண்டுகளாக முட்டையிட்டு குஞ்சு பொரித்த 2 இந்திய மலைப்பாம்பு குட்டிகள். இவை 16 அடி நீளமாக ராட்சத சைஸில் வளர்ந்துள்ளன. இந்த மலைப்பாம்புகளை பார்வையிட பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே மிகப்பெரிய முதலைப்பண்ணை சென்னையிலிருந்து (திருவான்மியூர்) சுமார் 30 கி.மீ. தொலைவிலும், மாமல்லபுரத்திலிருந்து சுமார் 25 கி.மீ. தொலைவிலும் வடநெம்மேலியில் அமைந்துள்ளது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள புகழ் பெற்ற சுற்றுலா தலமான மாமல்லபுரத்துக்கு பக்கத்தில் உள்ள இந்த பண்னைக்கு பல சர்வதேச சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

The 5-Year Secret of Vadanemmeli Farm Open to Visitors for the First Time

இந்தியாவிலுள்ள முதலை வகைகளில் முக்கியமானதாக கருதப்படும் நன்னீர் முதலைகள், அமெரிக்காவில் உள்ள அலிகேட்டர் முதலைகள், உப்பு நீர் முதலைகள், சதுப்பு நில முதலைகள், நீள வாயுடைய கரியல் ரக முதலைகள் என பல்வேறு வகை முதலைகள் இந்த பண்ணையில் உள்ள நீர் குளங்களில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

மேலும் ராட்சத ஆமைகள், மலைப்பாம்புகளும் பராமரிக்கப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளாக முட்டையிட்டு குஞ்சு பொரித்த 2 இந்திய மலைப்பாம்பு குட்டிகள், பார்வையாளர்களுக்கு அனுமதி இன்றி தனி அறையில் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த மலைப்பாம்புகளுக்கு எலி, தவளை உள்ளிட்டவைகள் உணவுகளாக வழங்கப்பட்டு வந்தன. தற்போது முதலைப்பண்ணைக்கு வரும் பார்வையாளர்கள் கண்டுகளிப்பதற்காக காற்றோட்டம் உள்ள 2 கண்ணாடி அறைகளில் 16 அடி நீளத்தில் வளர்ந்துள்ள இந்த 2 மலைப்பாம்புகளும் காட்சி படுத்தப்பட்டிருக்கிறது.

இங்குள்ள பெண் மலைப்பாம்புகள் தலா 50 கிலோ எடை உள்ளவை ஆகும். இந்த மலைப்பாம்புகள் ஒரே நேரத்தில் 100 முட்டைகள் இடும் தன்மை வாய்ந்தவை ஆகும். இந்த மலைப்பாம்பு முட்டைகளை சுற்றி தன் உடலை சுருட்டி வைத்து கொண்டு தசைகளை சுருக்குவதன் மூலம் வெப்ப நிலையை சீராக்கி முட்டைகளை அடைகாக்கும் இயல்புடையவை ஆகும்.

தற்போது கோடைகாலம் என்பதால் குளிர்ச்சியான சூழல், தண்ணீர் வேண்டும் என்பதால் அதன் தேவைகளை பூர்த்தி செய்ய தனியாக பணியாளர்கள் நியமிக்கப்பட்டு மலைப்பாம்பினை கண்காணித்து வருகிறார்கள். தற்போது கோடை விடுமுறையை முன்னிட்டு தங்கள் குழந்தைகளுடன் முதலை பண்ணைக்கு வரும் பார்வையாளர்கள் அந்த மலைப்பாம்புகளை பார்த்து ரசித்து புகைப்படம், செல்பி எடுத்து மகிழ்கிறார்கள்.

வடநெம்மேலி முதலைப்பண்ணைக்கு போகும் சுற்றுலா பயணிகளே, அதன் மிக அருகிலேயே முட்டுக்காடு படகு குழாம் அமைந்துள்ளது. முதலைப்பண்ணையில் இருந்து சென்னை நோக்கிச் செல்லும் சாலையில் 10 கிமீ தூரத்தில் முட்டுக்காடு உள்ளது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தால் நடத்தப்படுகிறது. இங்கு துடுப்பு படகுகள் , மிதி படகுகள் மற்றும் மோட்டார் படகுகள் வசதி உள்ளது.

அதேபோல் வடநெம்மேலி முதலைப்பண்ணையில் இருந்து மாமல்லபுரத்தைத் தாண்டி, புதுச்சேரி செல்லும் சாலையில் சுமார் 60 கி.மீ. தொலைவில் முதலியார்குப்பம் படகு குழாம் அமைந்துள்ளது. இதனை 'ரெயின்-டிராப் போட் ஹவுஸ்' என்றும் அழைப்பார். இங்கு கடலோரக் காயல் பகுதியில் படகு சவாரி செய்வது மிகவும் பிரபலம் ஆகும். மகாபலிபுரம் சுற்றுலா செல்பவர்கள் இந்த இரண்டு இடங்களையும் தவறவிட வேண்டாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+