நள்ளிரவு கொட்ட போகுது மழை.. சென்னை, செங்கல்பட்டு உட்பட 6 மாவட்டங்களுக்கு அலர்ட்! வானிலை மையம் பரபர

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் நள்ளிரவு 1 மணி வரை சென்னை மற்றும் சென்னை புறநகர்ப் பகுதிகள் உட்பட மொத்தம் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக நிலவி வந்த கோபை வெப்பம் முடிவுக்கு வந்துள்ளது. மேலும், மாநிலத்தில் பெரும்பாலான இடங்களில் மழையும் தொடங்கியுள்ளது.

Weather Chennai meteorological dept rain Chennai

இதனால் மக்களை இத்தனை நாட்கள் படுத்தி எடுத்து வந்த வெப்பம் சற்றே குறைந்துள்ளது. தலைநகர் சென்னையிலும் கூட கடந்த சில நாட்களாக ஓரளவுக்கு நல்ல மழையே பெய்துள்ளது.

6 மாவட்டங்கள்: இதற்கிடையே அடுத்த 2 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வனிலை மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 2 மணி நேரத்திற்கு அதாவது நள்ளிரவு 1 மணி வரை திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் மழை: பெரும்பாலான சென்னை புறநகர்ப் பகுதிகள் இந்த மாவட்டங்களில் தான் வரும் நிலையில், இங்கெல்லாம் இரவு 1 மணி வரை நல்ல மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் சில இடங்களில் நீர் தேங்கலாம் என்றும் இதனால் போக்குவரத்தும் பாதிக்கப்படலாம் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னை, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வானிலை மையம்: முன்னதாக வானிலை மையம் இன்று வெளியிட்ட தினசரி செய்திக்குறிப்பில், "தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று முதல் ஜூன் 15 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஜூன் 16, 17 தேதிகளில் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வரும் ஜூன் 18ஆம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல ஜூன் 19ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கிளைமேட்: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மாலை / இரவு வேளையில், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36°-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26°-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று கூறப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+