Where is Ditwah?: நாகையிலிருந்து எத்தனை கி.மீ. தூரத்தில் இருக்கிறது டிட்வா புயல்? டெல்டா வெதர்மேன்
சென்னை: நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு எத்தனை கி.மீ. தூரத்தில் டிட்வா புயல் இருக்கிறது என்பது குறித்து டெல்டா வெதர்மேன் தெரிவித்துள்ளார். அத்துடன் குறிப்பிட்ட பகுதி மக்கள் இன்று தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து டெல்டா வெதர்மேன் ஹேமசந்திரன் கூறியிருப்பதாவது: 40 மணி நேர இலங்கை நிலப்பரப்பு ஊடுருவலை கடந்து டெல்டா கடற்கரை நோக்கி நகரும் டிட்வா புயல். இன்று (29.11.2025) காலை 8:30 மணி நிலவரப்படி நாகைக்கு தெற்கே-தென் கிழக்கே 170 கிமீ, காரைக்கால் 180 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரையில் அதித கனமழையாக 250 மிமீ மழை பதிவு, வேதாரண்யத்தில் 185 மிமீ மழை பதிவு, வேளாங்கண்ணி 133 மிமீ மழையும், திருப்பூண்டியில் 123 மிமீ மழையும் பதிவு, நாகப்பட்டினம் 116 மிமீ என நாகை மாவட்டத்தில் சராசரியாக 140 மிமீ மழை பதிவாகியுள்ளது.
இப்புயல் தொடர்ந்து வடக்கு திசையில் பயணித்து அடுத்த ஓரிரு மணி நேரங்களில் டெல்டா கடற்கரை அடைந்து வலுபெற வாய்ப்பு. இன்று மாலை / இரவு டெல்டாவில் புயலின் முன்பகுதி நிலப்பகுதியில் ஊடுருவலை ஏற்படுத்தும் என எதிர்பபார்க்கப்படுகிறது.
தற்போது நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, காரைக்கால், கடலூர் மாவட்டங்களில் கனமழை துவங்கியுள்ளது. வரும் மணி நேரங்களில் மழையின் தாக்கம் படிப்படியாக அதிகரிக்கும்.
புயலின் மேற்கு டெல்டாவில் கரையேறும் போது இன்று நவம்பர் 29ல் மாலை/இரவு அதிகனமழை பெய்யும். காவிரி டெல்டா மக்கள் அடுத்த 24 மணி நேரத்திற்கு எச்சரிக்கையாக இருக்குமாறும், வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
காவிரி டெல்டாவில் தாக்கத்தை ஏற்படுத்தி இன்று நள்ளிரவு முதல் புயல் மீண்டும் வடக்கு திசையில் பயணிக்க துவங்கும் சென்னை உள்பட வடகடலோர மாவட்டங்களில் வரும் மணி நேரத்தில் மழை துவங்கி இன்று (29.11.2025) இரவு முதல் (01.12.2025) காலைக்குள் பரவலாக கன முதல் மிக கனமழையும், அதித கனமழையும் ஏற்படுத்தும்.
இன்று புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, தேனி, தென்காசி மாவட்டங்களிலும் கனமழை தொடரும். திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர், திருவண்ணாமலை, வேலூர் உள்பட உள் மாவட்டங்களிலும் பரவலாக கனமழை எதிர்ப்பார்க்கலாம்.
மீண்டும் கூறுகிறேன் காவிரி படுகை மாவட்ட மக்கள் இன்று வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications