கரூர் மாவட்ட மக்களுக்கு கலெக்டர் முக்கிய எச்சரிக்கை.. “மதிய நேரத்தில் யாரும் வெளியே வர வேண்டாம்..”
கரூர்: கரூர் மாவட்டத்தில் இன்று வெப்ப அலை வீசக்கூடும் என்பதால், பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் வெப்பத்தை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் திணறி வருகின்றனர். இந்த நிலையில் அடுத்த ஐந்து நாட்களில், கிழக்கு இந்தியா முழுவதும் வெப்ப அலை தொடரும் என்று இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

அதன்படி, தற்போது தமிழகம் உள்பட தென் இந்திய பகுதிகளில் வெப்ப அலை வீசத் தொடங்கியுள்ளது. கத்தரி வெயில் தொடங்கும் முன்பே தமிழ்நாட்டில் பல இடங்களில் இயல்பைவிட 2 முதல் 5 டிகிரி வரை வெப்ப அலை அதிகரித்து இருக்கிறது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெப்பத்தால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று வட தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில், வெப்ப அலை தொடர்பாக கரூர் மாவட்ட மக்களுக்கு, கரூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கரூரில் இன்று வெப்ப அலை வீசக்கூடும் என்பதால், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
இன்று மதியம் 12 மணி முதல் 3 மணி வரை பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்றும், பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்த வேண்டும் என்றும், வெயிலின் தாக்கத்தால் உடல் நலக் குறைவி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்றும் கரூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.
-
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்?












Click it and Unblock the Notifications