Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னைக்கு அருகே வங்கக்கடலில் மாற்றம்! காற்றழுத்த தாழ்வு பகுதி.. தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வங்கக்கடலில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றிருக்கிறது. இது சென்னையிலிருந்து சுமார் 370 கி.மீ தொலைவில் நிலைகொண்டிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் வந்துவிட்டாலே சென்னை மக்களுக்கு லேசான பீதி கிளம்பிவிடும். இந்த வருசம் இயற்கை என்ன செய்ய காத்திருக்கோ என்கிற அச்சம்தான் இதற்கு காரணம். ஏனெனில் ஆண்டின் இறுதியில் வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதியானது புயலாக வலுப்பெற்று சென்னை அல்லது சென்னைக்கு அருகே கரையை கடக்கும்போது சென்னை மக்கள் பல்வேறு பாதிப்புகளை சந்திக்கின்றனர்.

tamil nadu rains chennai rain weather

அந்த வகையில் இந்த ஆண்டு ஏற்கெனவே ஃபெஞ்சல் புயல் வந்து சென்றுவிட்டது. ஆனால் ஆட்டம் இன்னும் முடியவில்லை என்கிற ரீதியில் கடந்த 16ம் தேதி வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. சென்னையிலிருந்து சுமார் 370 கி.மீ தொலைவில் இது நிலை கொண்டிருக்கிறது. அடுத்த சில நாட்களில் இது வடகிழக்கு பகுதியை நோக்கி நகரும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. எனவே சென்னைக்கு மழைக்கான வாய்ப்பு சற்று குறைவாகவே இருக்கிறது.

இன்றைய தேதியில் விசாகப்பட்டினம் உள்ளிட்ட ஆந்திர கடலோர மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. முன்னதாக இன்று காலை வெளியாகியிருந்த வானிலை அறிவிப்பில்,

"நேற்று, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (20-12-2024) மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது, அடுத்த 12 மணி நேரத்தில், வடக்கு திசையில் நகர்ந்து, மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். அதன் பிறகு, இது அதற்கடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு- வடகிழக்கு திசையில் நகரக்கூடும்.

எனவே இன்று தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஒரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

டிச.22 முதல் 24 வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். டிச.25 மற்றும் 26ம் தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஒருசில பகுதிகளில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஒருசில பகுதிகளில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+