வங்கக் கடலில் உருவாகும் மொந்தா புயல்! அக்.27இல் சென்னைக்கு மிக கனமழை!
சென்னை: தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில் வரும் 27ஆம் தேதி அது மொந்தா புயலாக மாறி சென்னையில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகம், தெற்கு ஆந்திரத்திற்கு மழை பொழிவை கொடுக்கும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களிலும் இன்று கன மழை பெய்யக் கூடும்.

அது போல் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தென்கிழக்கு வங்ககடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று காலை தென்கிழக்கு வங்ககடலில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.
இது மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் தெளிவாகத் தெரியும். இந்த காற்றழுத்தம் அக்டோபர் 26ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுமண்டலமாக மாறும்.
இதனால் 27ஆம் தேதி திங்கள்கிழமை புயலாக மாறக் கூடும். இந்த புயலுக்கு மொந்தா என பெயரிடப்பட்டுள்ளது. இந்த பெயரை தாய்லாந்து நாடு பரிந்துரைத்துள்ளது. இந்த புயலால் வரும் 27ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய 3 மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறவில்லை. ஆனால் அக்டோபர் மாதம் இறுதியில் உருவாகும் காற்றழுத்தம், புயலாக மாறக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் அன்றைய தினம் சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications