‛‛4 நாள் வெப்ப அலை வீசும்’’.. சென்னை நிலவரம் என்ன? இன்று முதல் மக்களே உஷார்.. வானிலை ‛அலர்ட்’
சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் வரும் 30ம் தேதி வரை வீசப்போகும் வெப்பஅலை தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை அளித்துள்ளது.
தமிழகத்தில் தொடர்ந்து தற்போது வறண்ட வானிலையை நிலவி வருகிறது. குறிப்பாக காலை 9 மணிக்கே வெயில் வாட்டி வதைக்க தொடங்கிவிடுகிறது. அதன்பிறகு மதியம் சொல்ல வேண்டிய தேவையை இல்லை.

வழக்கம்போல் கோடை வெயில் கோபத்தை கொப்பளிக்கும் வகையில் வெளுத்து வாங்குகிறது. அதோடு வழக்கத்துக்கு மாறாக தற்போது தமிழ்நாட்டின் பல இடங்களில் வெப்பஅலையும் வீச தொடங்கி உள்ளது.
இதனால் வீடுகளில் ஏசி, பேன் இன்றி இருக்க முடியவில்லை. மேலும் கடும் வெயில் மற்றும் வெப்பஅலையில் நடமாடுவது என்பது உடலுக்கு பிரச்சனையை ஏற்படுத்தலாம். இதனால் பொதுமக்கள் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியே செல்வதை தடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர்கள் அறிவுரை வழங்கி உள்ளனர்.
இந்நிலையில் தான் தமிழ்நாட்டில் இன்று முதல் வரும் 30ம் தேதி வரை உள்மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த நாட்களில் உள்மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசவும் வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை என்பது வடதமிழக உள்மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் 38 டிகிரி செல்சியஸ் முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகலாம் என கூறப்பட்டுள்ளது. தமிழகத்தின் பிற மாவட்டங்கள் புதுவை, காரைக்கால் பகுதிகளில் 35 டிகிரி செல்சியஸ் முதல் 39 டிகிரி செல்சியஸ் வரை பதிவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர சென்னையை பொறுத்தமட்டில் அடுத்த 24 மணிநேரம் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை என்பது 36 டிகிரி முதல் 37 டிகிரி செல்சியஸையொட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை என்பது 27 முதல் 28 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications