99B-ஆக மாறிய பெங்கல் புயல்.. வானிலை ஆய்வு மையம்.. திடீரென இப்படி சொல்வது ஏன்? என்ன காரணம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெங்கல் புயலை இந்திய வானிலை ஆய்வு மையம் 99B என்று குறிப்பிட தொடங்கி உள்ளது. இதற்கு பின் முக்கியமான சில காரணங்கள் உள்ளன.

பெங்கல் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

tamilnadu weatherman summer weather news

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். கனமழை பெய்யும். நகரின் பல பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று மாலை 5.30 மணிக்குள் புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டு உள்ளது. புயல் சின்னம் சென்னையில் இருந்து 530 கி.மீ தொலைவில் உள்ளது. நகரும் வேகம் 13 கி.மீட்டரில் இருந்து 10 கி.மீட்டராக குறைந்துள்ளது. புயல் கரையை கடக்கும் போது சென்னையில் 29, 30தேதிகளில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக மணிக்கு 10 கிமீ வேகத்தில் நகர்ந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது வேகம் குறைந்து 3 கிமீ வேகத்தில் நகர்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டு உள்ளது. கடலூர் - சென்னை இடையே வரும் 30ம் தேதி கரையை பெங்கல் புயல் கடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த புயல் நேற்று மாலை உருவாகி இருக்க வேண்டும். ஆனால் உருவாகவில்லை. இன்று இதுவரை உருவாகவில்லை. நாளை காலைக்குள் உருவாகிவிடும் என்று கூறப்படுகிறது. இது புயலாக மாறவில்லை என்பதால் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்திற்கு தற்போது குறியீடு வைக்கப்பட்டு உள்ளது.

அதன்படி பெங்கல் புயலை இந்திய வானிலை ஆய்வு மையம் 99B என்று குறிப்பிட தொடங்கி உள்ளது.

வானிலை ஆய்வு மையம்: தமிழ்நாட்டில் இன்று பெய்ய உள்ள மழை தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் விடுத்த எச்சரிக்கையில், நான் முன்பே கொடுத்த வானிலை கணிப்புகளில் எந்த மாற்றமும் இல்லை. இன்று டெல்டா முதல் சென்னை வரை பகல்/இரவு நேரங்களில் மிதமான மழை பெய்யும். பகலில் குளிர்ந்த காற்று அதிகம் வீசும். நன்றாக என்ஜாய் செய்யவும்.

29 முதல் தீவிர மழை தொடங்கி 30ம் தேதி வரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, புதுச்சேரி, கடலூர் மற்றும் விழுப்புரம் கடலோர பகுதிகளில் கனமழை பெய்யும். டிசம்பர் 1 மற்றும் 2ல் ஃபுல் எபெக்ட் காரணமாக மழை பெய்யலாம் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+