ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்தலாம்
சென்னை: ஆன்லைனில் மின்சார கட்டணத்தை செலுத்தும் வசதியை தமிழக மின்துறை அறிமுகப்படு்த்தியுள்ளது.
இது குறித்து மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறுகையில்,
தமிழ்நாட்டில் 1 கோடியே 89 லட்சம் மின் பயனீட்டாளர்கள் மின்வாரிய அலுவலகங்களில் உள்ள வசூல் மையங்களில் மின் கட்டணம் செலுத்தி வருகின்றனர்.
மக்கள் வீட்டில் இருந்தபடியே, மின்சார வாரியத்தின் இணையதளமான www.tneb.in மூலம் மின்சார கட்டணம் செலுத்தும் புதிய வசதியை இப்போது அறிமுகப்படுத்துகிறோம்.
இந்தியன் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிகளுடன் இணைந்து இத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இதன்படி, எந்த நேரமும், எந்த நாளிலும் பணம் செலுத்தலாம். நேரம் மிச்சமாகும். ஆன்-லைனில் மின் கட்டணம் செலுத்துவதால் மின்வாரிய அலுவலகங்களில் இயங்கும் வசூல் மையங்கள் மூடப்பட மாட்டாது. அவை தொடர்ந்து செயல்படும்.
ஏற்கனவே எந்த நேரத்திலும் பணம் செலுத்தும் வசதி (ஏ.டி.பி.) கடந்த ஆண்டு கனரா வங்கி உதவியுடன் சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டது.
அதே போல ஆக்ஸிஸ் (முன்னாள் யுடிஐ வங்கி) வங்கியின் கிரெடிட் கார்டு, மற்றும் டெபிட் கார்டு கொண்டும், இந்த வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் நெட்-பேங்கிங்' முறையிலும் மின் கட்டணம் செலுத்தும் வசதி கடந்த ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது.
இப்போது இணையதளம் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
சென்னைக்கு வடக்கே கும்மிடிப்பூண்டி முதல் தெற்கே மரக்காணம் வரை உள்ள 28 லட்சம் மின் நுகர்வோர்கள் இந்த வசதியால் முதல் கட்டமாக பயனடைவார்கள்.
இவர்கள் உலகத்தின் எந்த மூலையில் இருந்தும் தங்களது மின் கட்டணத்தை செலுத்த முடியும். வீட்டில் கம்ப்யூட்டருடன் பிரிண்டர் இருந்தால் ஆன்-லைன் மூலம் பணம் செலுத்தியதும் உடனே ரசீதும் எடுத்துக் கொள்ளலாம். இந்த வசதி, இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும்.
இதுபோன்ற வசதியை செய்து கொடுக்க மற்ற வங்கிகள் முன்வந்தாலும் அவற்றை தமிழ்நாடு மின்சார வாரியம் ஊக்குவிக்கும்.
தமிழகத்திற்கு 8,800 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. 7,800 மெகாவாட் மின்சாரம் தற்போது உற்பத்தி செய்யப்படுகிறது. மீதமுள்ள ஆயிரம் மெகாவாட் மின்சாரம் வெளியில் இருந்து வாங்கப்படுகிறது.
சென்னையில் 24 மணி நேரமும் மின்சாரம் சப்ளை செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் இரவு முழுவதும் மின்வெட்டு கிடையாது. தேவைப்பட்டால் கிராமங்களில் மட்டும் 2 மணி நேரம் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது. 11 லட்சம் மாணவர்களின் படிப்பு பாதிக்காமல் இருப்பதற்காக மாலை 6 மணி முதல் 11 மணி வரை தடையில்லாத மின்சாரம் வழங்கப்படுகிறது என்றார் ஆற்காடு வீராசாமி.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications