செம்மொழி தமிழாய்வு நிறுவனம் மத்திய பல்கலைக்கழகத்துடன் இணைப்பா?- பிரகாஷ் ஜவடேகர் பதில்
செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தை மத்திய பல்கலைக் கழகத்துடன் இணைப்பது தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்
டெல்லி: செம்மொழி நிறுவனங்களை மத்திய பல்கலைக் கழகங்களுடன் இணைப்பது தொடர்பாக இதுவரை எந்த முடிவையும் அரசு இறுதி செய்யவில்லை என்று மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.
செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் சென்னை தரமணி தமிழ்நாடு அரசு சாலை போக்குவரத்து நிறுவன வளாகத்தில் இயங்கி வருகின்றது. இந்நிறுவனத்திற்கு தமிழ்நாடு அரசால் காஞ்சிபுரம் மாவட்டம், சோழிங்கநல்லூர், பெரும்பாக்கத்தில் 17 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு அந்நிலத்தில் மத்திய அரசின் பொதுப்பணித்துறை வாயிலாக கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தமிழின் செவ்வியல் பரிணாமங்களை உலகுக்கு எடுத்துக்காட்டும் வகையில் முதுபெரும் தமிழறிஞர்களும், மூத்த ஆராய்ச்சியாளர்களும் இந்நிறுவனத்தின் வழியே உயர் ஆய்வு செய்து தமிழின் பெருமைகளை பறை சாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்துடன் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை இணைப்பதற்கான முயற்சி நடைபெறுவதாக தகவல் வெளியானது. இதற்கு சட்டசபையிலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளித்தார்.
இதனிடையே சில தினங்களுக்கு முன்பு தலைமைச் செயலகத்தில், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் ஐந்தாம் ஆட்சிக்குழு கூட்டம் நடைபெற்றது. செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம், திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுசெல்ல இருப்பதாக சமீபத்தில் ஊடகங்களில் செய்திகள் வந்தன. தமிழ்மொழியின் மேன்மையை ஆராய்ச்சி மூலம் உலகுக்குப் பகரும் இந்நிறுவனம், சென்னையில் இயங்குவதில் மாற்றம் செய்யக்கூடாது. எந்தக்காரணம் கொண்டும் அதன் தன்னாட்சி அமைப்பை இழக்கக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் தமிழ் வளர்ச்சிக்கு என புதுத்திட்டங்களை செயல்படுத்திச் செவ்வியல் தமிழ் இலக்கிய உயராய்வை மேலும் செம்மைப்படுத்துவதற்காக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
இது குறித்து ராஜ்யசபாவில் கேட்கப்பட்ட கேள்விக்கு பிரகாஷ் ஜவடேகர் எழுத்து மூலமாக பதில் அளித்துள்ளார். அதில்,
செம்மொழி நிறுவனங்களை மத்திய பல்கலைக் கழகங்களுடன் இணைப்பது தொடர்பாக இதுவரை எந்த முடிவையும் அரசு இறுதி செய்யவில்லை. அனைத்து இந்திய மொழிகளையும் ஊக்குவிக்க வேண்டும் என்பதே அரசின் கொள்கையாகும் என்று கூறப்பட்டது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications