For Daily Alerts
Just In
கர்நாடகத்தில் கடந்த மாதம் மட்டும் 25 விவசாயிகள் தற்கொலை.. ஓப்பனாக ஒப்புக்கொள்ளும் சித்தராமையா..
பெல்லாரி: கர்நாடக மாநிலத்தில் கடந்த மாதம் மட்டும் 25 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
8 விவசாயிகள் கரும்பு விவசாயத்தால் ஏற்பட்ட கடன் சுமை காரணமாக தற்கொலை செய்துகொண்டதாகவும், பிற விவசாயிகள் வேறு காரணங்களுக்காக உயிரை மாய்த்துக்கொண்டதாகவும் அவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
தமது அரசு விவசாயிகளுக்கு ஆதரவாக இருக்கும் என்று உறுதி அளித்துள்ள சித்தராமையா, எதிர்காலத்தில் இதுபோன்று தற்கொலை முடிவை எடுக்க வேண்டாம் என்று விவசாயிகளை கேட்டுக்கொண்டுள்ளார்.
விவசாயிகளை மிரட்டி வட்டி வசூலிக்கும் கந்துவட்டிக்காரர்கள் மற்றும் கடன் கொடுக்கும் தனியார் நிறுவனங்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் சித்தராமையா உறுதியளித்தார்.
Comments
English summary
Chief minister Siddaramaiah on Saturday said that twenty-five farmers have committed suicide in Karnataka since last month. Eight of the farmers were debt-ridden sugarcane growers while others committed suicide for different reasons, he told reporters here.
Story first published: Saturday, July 4, 2015, 22:51 [IST]