காஷ்மீரில் சுயாட்சி உரிமையை சிதைக்கும் பாகிஸ்தான்.. ஐ.நா.வில் சீறிய இந்தியா
சுயாட்சி உரிமையை பாகிஸ்தான் சிதைத்து வருவதாக ஐ.நாவில் இந்திய பிரதிநிதி கடுமையாக குற்றம் சாட்டினார்.
நியுயார்க்: காஷ்மீர் விவகாரத்தில் சுயாட்சி முறையை பாகிஸ்தான் தவறாக பயன்படுத்தி இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதத்தைத் தூண்டி விடுகிறது என்று ஐ.நா பொதுச் சபையில் இந்திய நிரந்தர பிரதிநிதி மயங்க் ஜோஷி கடுமையாக பேசினார்.
"பாகிஸ்தான் மக்களுக்கே இத்தனை கால அந்நாட்டு வரலாற்றில் அவர்களுக்கான ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில்இ அது தொடர்ந்து காஷ்மீரின் ஒரு பகுதியை ஆக்ரமித்து வருகிறது. அப்பகுதி காஷ்மீரை ஒரு காலனியாகவே ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

ஆனால், தொடர்ந்து ஜனநாயக முறையில் மக்கள் தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிகள் கொண்ட இப்பகுதி காஷ்மீரின் சுயாட்சி உரிமைகள் குறித்து தவறாக பிரச்சாரம் செய்து இதனை ஒரு திரையாகப் பயன்படுத்தி இந்திய மக்கள் மீது பயங்கரவாதத்தை தூண்டி விட்டு வருகிறது" என்று ஐநா பொதுச்சபையில் இந்தியாவின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார்.
சுய நிர்ணய உரிமைக்கான பாகிஸ்தானின் 'சடங்கார்த்த பரப்புரையை' சுட்டிக்காட்டிய மயங்க் ஜோஷி, பாகிஸ்தான் தங்கள் நாட்டு மக்கள், தங்கள் சமுதாயம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை உன்னிப்பாக கவனித்து சரி செய்ய முயற்சி செய்வதை விடுத்து, அண்டை நாட்டின் பிராந்திய பிரச்சினைகளை சரி செய்வதற்காக பேசி வருவது பன்னாட்டு விதிமுறைகளை மீறுவதாகும் என்று மேலும் கடுமையாக சாடினார்.
"இப்போது சர்வதேச நாடுகளே பாகிஸ்தானின் தவறான முயற்சிகளை கவனித்திருப்பார்கள். எனவே நாங்கள் இதில் எங்களை ஈடுபடுத்திக் கொள்ள விரும்பவில்லை" என்றார் மயங்க் ஜோஷி.
-
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் முடிவு என்ன? டிரம்பின் மருமகன் பயணம் ஏன் முக்கியமானது? -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்த மத்திய அரசு! விலை குறையுமா? விவரம் -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்!












Click it and Unblock the Notifications