வடிவேலு காமெடி மாதிரி இருக்கு சசிகலாவின் "சிங்கம்" பேச்சு.. ஓபிஎஸ் நக்கல்!
சசிகலாவைப் பார்த்தா வடிவேலு காமெடிதான் ஞாபகத்திற்கு வருது என்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நக்கலடித்துள்ளார்.
சென்னை: யாராவது தன்னைத் தானே சிங்கம் என்று சொல்லிக் கொள்வார்களா. வடிவேலு பட காமெடி போலவே இருக்கிறது சசிகலாவின் பேச்சு என்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கிண்டலடித்துள்ளார்.
கூவத்தூர் போயிருந்த சசிகலா அங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ள அதிமுக எம்.எல்.ஏக்கள் மத்தியில் பேசினார்., அப்போது தன்னை சிங்கக் குட்டி என்றும் சிங்கம் என்றும் அவர் பேசினார். இதை தனது பேட்டியின்போது சுட்டிக் காட்டி காமெடி செய்தார் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்.

அவர் இன்று தனது இல்லத்தில் அளித்த பேட்டியின்போது கூறுகையில், உங்களிடம் கேட்கிறேன். யாராவது தன்னைத் தானே பார்த்து சிங்கம் என்று சொல்வார்களா. இவர் தன்னைத் தானே சிங்கம் என்று சொல்கிறார். இதைப் பார்த்தால் வடிவேலு படத்தில் ஒரு காமெடிக் காட்சிதான் நினைவுக்கு வருகிறது.
தமிழ் மக்கள் விழிப்புணர்வுடன் உள்ளனர். தமிழக மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டுள்ளனர். தமிழ் மக்களின் எழுச்சியை உலகமே பாரக்கிறது.
இதுபோன்ற எழுச்சியை இந்தியா இதுவரை பார்த்ததில்லை. யாரையும் அவர்கள் ஏமாற்ற முடியாது.
என்னை கீழ் வரிசையில் உட்கார வைத்து அசிங்கப்படுத்தினார் சசிகலா. என்னிடம் பலர் இதுகுறித்து போனில் வேதனைப்பட்டுப் பேசியபோது நான் பொறுமையாக இருக்கச் சொன்னேன். என்னிடம் பேசியது போலயாரிடமும் பேசாதீங்க என்று அமைதிப்படுத்தினேன்.
முதல்வர் ஜெயலலிதா என்னை தனக்கு சமமாகத்தான் உட்கார வைப்பார். ஒருபோதும் என்னை அவர் அவமதித்ததில்லை. அனைத்து எம்.எல்.ஏக்களையும் சுதந்திரமாக, சுயாதீனமாக செயல்பட அனுமதித்தால் அத்தனை பேரும் எனக்குத்தான் ஆதரவு தெரிவிப்பார்கள். சட்டசபையில் நான்தான் அறுதிப் பெரும்பான்மையை நிரூபிப்பேன். இது உறுதி என்றார் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications