மின் நூல் வடிவில் நான் கண்ட அண்ணா நூல் வெளியாகியுள்ளது.
மின் நூல் வடிவில் நான் கண்ட அண்ணா நூல் வெளியாகியுள்ளது.
தமிழ்த்திண்ணை இணையதளத்தில் (www.tamilthinai.com) இந்த மின் நூல் இடம் பெற்றுள்ளது.
அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி திருச்சி வழக்கறிஞர் எம்.எஸ்.வெங்கடாசலம் இந்த நூலை எழுதியுள்ளார். விரைவில் வெளிவரவிருக்கும் நான் கண்ட அண்ணா என்னும் இந்த நூல் உலகத் தமிழர்களுக்காக மின்-நூல் வடிவில் தமிழ்த்திணையில் (www.tamilthinai.com) அக்டோபர் 2ஆம் நாள் வெளியிடப்பட்டது.
இதில் 38 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. அண்ணாவை எளிமையாகப் புரிந்து கொள்ள அண்ணாவுடன் இருந்து, Home land இதழின் துணையாசிரியராக விளங்கியவர் எம்.எஸ்.வி. என அழைக்கப்படும் எம்.எஸ்.வெங்கடாச்சலம்.
மிகச் சிறந்த மொழிபெயர்ப்பாளர் என்னும் சிறப்பைப் பெற்ற எம்.எஸ்.வி.யின் எழுத்தினை அனைவரும் படித்து அண்ணாவின் சிறப்பை நுகருமாறு, தமிழ்த்திணை ஆசிரியர் முனைவர் தி.நெடுஞ்செழியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முனைவர் நெடுஞ்செழியன், மயிலாடுதுறை, மன்னப்பந்தல், ஏவிசி கல்லூரியின் தமிழ் இணைப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.












Click it and Unblock the Notifications