தாய்மொழி கல்வி பயில்வோருக்கு முன்னுரிமை தர கோரிக்கை
ஈரோடு: தாய்மொழியில் பயிலும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று இந்திய சோஷலிஸ்ட் மாணவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
மாவட்ட பேரவை கூட்டம் ஈரோட்டில் மாவட்ட நிர்வாகி எம்.மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
மத்திய அரசு பட்ஜெட்டில் கல்விக்கு 10 சதவீத நிதி ஒதுக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் அனைத்தையும் அரசே ஏற்று நடத்த வேண்டும். ஈரோட்டில் பல்கழைக்கழகம் மற்றும் அரசு கலை அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும்.
பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர் பேரவை தேர்தலை நடத்த வேண்டும். அரசு உதவி பெறும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும்.
இலங்கை அரசுக்கு வழங்கப்படும் ராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை இந்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.
மாநில அமைப்பாளர் எம்.ஜி.ராஜேஷ், மாவட்ட பொறுப்பாளர்கள் சென்னியப்பன், பிரபு. ஜெயசாமி, கார்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications