2008ன் முக்கிய சம்பவங்கள்!
Subscribe to Oneindia Tamil

விஸ்வ இந்து பரிஷத்தைச் சேர்ந்த துறவி லட்சுமாணந்த சரஸ்வதி சுவாமிகள் ஆகஸ்ட் 24ம் தேதி கொல்லப்பட, ஒரிசாவில் வெடித்தது கலவரம்.
காந்தமால் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ மக்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், பள்ளிக் கூடங்கள் என கண்ணில் பட்டதையெல்லாம் வெறித்தனமாக தாக்கினர் சங் பரிவார் அமைப்பினர்.
மாவட்டமே பற்றி எரிந்தது. மதச் சார்பின்மையை கேள்விக்குறியாக்கி, அப்பாவி மக்களின் உயிர்களை வேள்வியாக்கிய வேதனை தினம். 30க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் இந்த கலவரத்தில் உயிரிழந்தனர். கன்னியாஸ்திரி ஒருவரும் கற்பழிக்கப்பட்ட கொடூரமும் நடந்தது.
ஒரிசாவில் தொடங்கிய இந்த கலவரம் கர்நாடகத்திலும் பரவியது. மங்களூர் உள்ளிட்ட இடங்களில் சர்ச்சுகள் தாக்கப்பட்டன. தமிழகத்தையும் இந்த மதவாதம் தொட்டுப் பார்த்தது. ஆனால் காவல்துறையின் கடும் நடவடிக்கையால் சத்தமின்றி ஓய்ந்து போனது.












Click it and Unblock the Notifications