முழுப் பெண்ணாக மாறிய அரவாணி!
சென்னை: நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த அரவாணி ஒருவர் சென்னை அரசு பொது மருத்துவமனையில் பாலின மாற்று அறுவைச் சிகிச்சை செய்து கொண்டு முழுப் பெண்ணாக மாறியுள்ளார்.
நீலகிரி மாவட்டம், ஊட்டியைச் சேர்ந்தவர் ஸ்வாதி (22). இவர் ஒரு அரவாணி. பெண் தன்மையுடன் இருந்த இவர் முழுப் பெண்ணாக மாற விரும்பினார்.
இதையடுத்து சென்னை வந்த அவர் அரசு பொது மருத்துவமனையை அணுகி முழுப் பெண்ணாக மாற அறுவைச் சிகிச்சை செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தார்.
இதையடுத்து டாக்டர்கள் ஸ்வாதியை பரிசோதித்து, இரு தினங்களுக்கு முன், பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்தனர்.
தற்போது ஸ்வாதி நல்ல உடல்நலத்துடன் உள்ளார். இரது விதைப் பை, ஆணுறுப்பு ஆகியவை அகற்றப்பட்டு விட்டன. ஆணுறுப்பு இருந்த இடத்தில் பெண்ணுறுப்பு போல மாற்றி அமைக்கப்பட்டு விட்டது. இருப்பினும் இவரால் கருத்தரிக்க முடியாது.
இந்த நிலையில், தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், ஸ்வாதியை சந்தித்து நலம் விசாரித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த அறுவை சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் செய்தால் ஒன்றரை லட்சம் ரூபாய் செலவாகும். ஆனால், அரசு பொது மருத்துவமனையில் சேர்த்ததால், இந்த அறுவை சிகிச்சை இலவசமாக செய்யப்பட்டுள்ளது என்றார்.
இந்தியாவிலேயே முதல் முறையாக அரவாணி ஒருவருக்கு பாலின மாற்று அறுவைச் சிகிச்சை இங்குதான் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
மகாபலிபுரம் டூ எண்ணூர்.. இந்தியாவின் மிக முக்கிய ரோடு.. மின்னல் வேகத்தில் தயார் ஆகும் 10 வழிச் சாலை -
மண்டைக்கேறிய போதை.. ரம்யாவின் படுக்கையறையில் புகுந்த சென்னை போலீஸ்காரர்.. மறு நொடியே பிக் ட்விஸ்ட் -
பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவுக்கு நிபந்தனைகள் தளர்வு! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
சென்னை மக்களே 'கரண்ட் பில்' இன்னும் கட்டவில்லையா.. மின்சார வாரியம் மிக முக்கிய அறிவிப்பு -
மாற்றி யோசித்த சென்னை குடிநீர் வாரியம்.. வேஸ்ட் தண்ணீரில் 551 கோடி ரூபாய் வருமானம்.. எப்படி ? -
காது மடல் ஓட்டைகளுக்கு ஆபரேஷன்! சென்னை நட்சத்திர ஹோட்டலில் தங்கிய மும்பை இன்ஸ்டா பிரபலம் கைது! -
சென்னை ரிசார்ட்டில் பல் மருத்துவர் செய்த காரியம்.. ₹11 லட்சத்துக்காக பவர் பத்திரத்தில் ஆடிய ஆட்டம்! -
கோவை, நீலகிரியில் 2 நாட்களுக்கு மழை வெளுக்க போகுது.. தென் தமிழகத்திலும் மழை கொட்டும்.. வானிலை அலர்ட் -
“அரசு எங்களை ஏமாத்திருச்சு..” தேர்தல் நேரத்தில் போராட்டத்தை கையில் எடுக்கும் டாஸ்மாக் பணியாளர்கள்! -
ஆரோவில் நிலம் 350 கோடி.. ஆளுநர் ஆர்.என்.ரவி, பெண் ஐஏஎஸ் அதிகாரி மீது பறந்த புகார்.. முழு விவரம் -
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை











Click it and Unblock the Notifications