For Daily Alerts
Just In
ஓரினச் சேர்க்கை தீர்ப்பு-தமுமுக ஆர்ப்பாட்டம்
சென்னை: ஓரினச் சேர்க்கையை தடை செய்யும் 377வது சட்டப் பிரிவு செல்லாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பைக் கண்டித்து தமுமுக சார்பில் இன்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இயற்கை விதி்க்குப் புறம்பாக, மனித குலத்திற்கு எதிரான, சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கக் கூடிய ஓரினச் சேர்க்கைக்கு தண்டனை அளிக்கும் ஐ.பி.சி 377வது பிரிவை ரத்து செய்ய முயலும் மத்திய அரசைக் கண்டித்து மாபெரும் ஆர்பபாட்டம் நடத்தப்படும்.
இன்று மாலை 4 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே மெமோரியல் ஹால் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமுமுக தெரிவித்துள்ளது.
Comments
அரசியல் தமிழ்நாடு போராட்டம் agitation tamilnadu tmmk தமுமுக judgement தீர்ப்பு ஓரினச் சேர்க்கை gay rights
Story first published: Monday, July 6, 2009, 14:28 [IST]