Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

25ம் தேதி குற்றாலம் சாரல் விழா தொடக்கம் - அமைச்சர்கள் பங்கேற்பு

Subscribe to Oneindia Tamil

Courtallam
குற்றாலம்: குற்றாலத்தில் சாரல் விழா வரும் 25ம் தேதி ஆரம்பமாகிறது. இதில் சபாநாயகர், 4 அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள்.

குற்றாலம் கலைவாணர் அரங்கில் ஆண்டுதோறும் சாரல் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு விழா வரும் 25ம் தேதி ஆரம்பமாகி ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி வரை நடக்கிறது.

குற்றாலம் கலைவாணர் அரங்கில் 25ம் தேதி மாலை 5 மணிக்கு சாரல் விழா துவக்க விழா நடக்கிறது. சபாநாயகர் ஆவுடையப்பன் தலைமை வகிக்கிறார். கலெக்டர் ஜெயராமன் வரவேற்கிறார். சாரல் விழாவை துவக்கி வைத்து வீட்டு வசதி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேசுகிறார்.

கலைநிகழ்ச்சிகளை துவக்கி வைத்து சுற்றுலா துறை அமைச்சர் சுரேஷ் ராஜன், பல்வேறு போட்டிகளை துவக்கி வைத்து அமைச்சர் மைதீன்கான், குத்துவிளக்கேற்றி
அமைச்சர் பூங்கோதை பேசுகின்றனர். எம்பி லிங்கம், எம்எல்ஏ கருப்பசாமி பாண்டியன் முன்னிலை வகிக்கின்றனர்.

எம்பி ராமசுப்பு, எம்எல்ஏக்கள் பீட்டர் அல்போன்ஸ், மாலைராஜா, அப்பாவு, வேல்துரை, வசந்தகுமார், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் கிரகாம்பெல், கருப்பசாமி, சதன் திருமலைகுமார், வேளாண் விற்பனை குழு தலைவர் கணேசன், குற்றாலம் டவுண் பஞ் தலைவர் ரேவதி உள்பட பலர பேசுகின்றனர். டிஆர்ஓ ரமண சரஸ்வதி நன்றி கூறுகிறார்.

கலைநிகழ்ச்சிகள்

அன்று மாலை 5 மணிக்கு ஆழிதிருவரங்கம் சகோதரிகள் அபிராமி-ஆனந்தி ஆகியோரின நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சி, 5.30 மணிக்கு அரசு இசை பள்ளி மாணவிகளின் பரத நாட்டியம், இரவு 7 மணி்க்கு சின்ன திரை இயக்குனர் ராஜ்குமாரின் அசத்தபோவது யாரு நிகழ்ச்சி நடக்கிறது.

துவக்க விழா வரவேற்பு நிகழ்ச்சியில் மாவட்ட அரசு இசைப்பள்ளி மாணவர்களின் மங்கள இசை, பரதநாட்டியம், மண்டல கலை பண்பாட்டு மையம் சார்பில் தோட்டாக்குடி மாரியப்பன் குழுவினரின் நையாண்டி மேளம், கரகாட்டம், பொய்கால் குதிரையாட்டம், காவடியாட்டம், மயிலாட்டம் நிகழ்ச்சிகளும் நடக்கிறது என்று கலெக்டர் ஜெயராமன் தெரிவித்தார்.

அருவிகளில் வெள்ளப்பெருக்கு - குளிக்க தடை

இதற்கிடையே, குற்றாலத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மெயின் அருவி, ஐந்தருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றாலத்தில் கடந்த மூன்று வாரங்களாக சீசன் அருமையாக உள்ளது. குறிப்பாக கடந்த மூன்று தினங்களாக இடைவிடாமல் சாரல் தூறிக் கொண்டே இருக்கிறது. மெயி்னருவியில் பாதுகாப்பு வளைவையும் தாண்டி தண்ணீர் கொட்டுகிறது. ஐந்தருவியில் 2 பிரிவுகளையும் இணைத்து மூன்று அருவியாக தண்ணீர் கொட்டுகிறது.

பழைய குற்றால அருவி, சிற்றருவி, புலியருவி ஆகியவற்றிலும் தண்ணீர் ஆர்பரித்து விழுகிறது. வேலைநாளாக இருந்த போதிலும் குற்றாலத்தில் நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மெயின் அருவியில் தண்ணீர் அதிகமாக விழுந்ததால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகளை வரிசையில் நிறுத்தி 20 பேராக அனுமதித்தனர்.

இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நேற்று இரவு அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் இரவு 9 மணி முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதி்க்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+