பழ. கருப்பையாவுக்கு அ.ச.ஞா. விருது
சென்னை: சென்னை கம்பன் கழகத்தின் சார்பில் 12 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
சென்னை கம்பன் கழகத்தின் சார்பிலான 35வது கம்பன் விழா நேற்று தொடங்கியது. இதில் 12 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. அவர்களது விவரம்:
கம்பர் விருது- இலங்கை எழுத்தாளர் ஜெயராஜ்
பேராசிரியர் கே. சுவாமிநாதன் நினைவுப் பரிசு- எழுத்தாளர் சிவசங்கரி
மு.மு. இஸ்மாயில் நினைவுப் பரிசு- கவிஞர் மு. மேத்தா
கி.வா.ஜ. நினைவுப் பரிசு- வழக்கறிஞர் தேனிரா பாண்டியன்
கம்பன் அடிப்பொடி நினைவுப் பரிசு- பேராசிரியர் பூவண்ணன்
ராதாகிருஷ்ணன் நினைவுப் பரிசு- பி.எல். ராஜேந்திரன்
மர்ரே எஸ். ராஜம் நினைவுப் பரிசு- பதிப்பாளர் மெ. செல்லப்பன்
க.கு. கோதண்டராமன் நினைவுப் பரிசு- கவிஞர் வேலூர் நாராயணன்
சீறாப்புராணப் பரிசு- மு. சாயுபு மரைக்காயர்
அ.ச.ஞா. விருது- பழ. கருப்பையா
கம்பன் அடிப்பொடி சா. கணேசனார் விருது- பா. ஜெகன்
பேராசிரியர் சாலமன் பாப்பையா பட்டிமன்றக் குழு பரிசு- மு. ரம்யா.
மேலும் கம்பன் கழகம் நடத்திய இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற 49 மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.
இந்த விருதுகளையும் பரிசுகளையும் மத்திய இணையமைச்சர் ஜெகத்ரட்சகன், நீதிபதி எம். சொக்கலிங்கம் ஆகியோர் வழங்கினர்.
நிகழ்ச்சியில் சென்னை கம்பன் கழகத் தலைவர் ஆர்.எம். வீரப்பன், தஞ்சை தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராஜன், சுற்றுலாத்துறை செயலாளர் வெ. இறையன்பு உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றுப் பேசினர்.
இந்த விழா நாளை நிறைவு பெறுகிறது.












Click it and Unblock the Notifications