பர்மியத் தமிழ் எழுத்தாளர் ஷாஹா மரணம்
Subscribe to Oneindia Tamil
பர்மியத் தமிழ் எழுத்தாளர் ஷாஹா தன்னுடைய 93ஆம் வயதில் மியான்மர் (பர்மா) தலைநகர் ரங்கூனில் புதன் கிழமை (23-06-2010) அன்று மரணம் அடைந்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் சித்தார்கோட்டை என்ற கிராமத்தில் பிறந்த ஷாஹுல் ஹமீது என்ற இயற்பெயருடைய இவர் நீண்ட காலமாக தம் குடும்பத்தினருடன் ரங்கூனில் வாழ்ந்து வந்தார்.
1941ஆம் ஆண்டில் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்ற இவர் பல சமூக நாவல்களையும் சுமார் 50க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ளார். இவரது சிறுகதைகளில் சில இந்தி மற்றும் உருது மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.












Click it and Unblock the Notifications