For Quick Alerts
For Daily Alerts
Just In
தமிழகத்திலேயே ஆசிரியர் பயிற்சி வகுப்பில் சேர்ந்த முதல் திருநங்கை
திருச்சி: திருச்சியில் நடந்த ஆசிரியர் பயிற்சி வகுப்புக்கான கவுன்சிலிங்கில் நந்தினி என்ற திருநங்கை தேர்வானார்.
திருச்சியில் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் மாணவ - மாணவிகளுக்கான கவுன்சிலிங் நடைபற்று வருகிறது. இதில் கலந்து கொள்ள தமிழ் நாடு முழுவதும் இருந்து ஏராளமான பேர் வருகை தந்தனர்.
அதில் பரமக்குடி வசந்த நகரைச் சேர்ந்த நந்தினி என்ற திருநங்கை ஒருவரும் கலந்து கொண்டு தேர்வு பெற்றார். அவருக்கு திருச்சி சுந்தர் நகர் நாகம்மை ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து படிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இவர், மதுரையில் ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. படித்துள்ளார்.
தமிழகத்தில் ஆசிரியர் பயிற்சியில் சேர்ந்த முதல் திருநங்கை இவர் தான் என்பது குறிப்பிடதக்கது.
Story first published: Saturday, July 10, 2010, 14:10 [IST]