தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு நடக்கிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் குரூப்-2 தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடக்கிறது. மொத்தம் 1,225 காலி இடங்களுக்கு சுமார் 4 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.

நகராட்சி கமிஷனர், தலைமைச் செயலக உதவி பிரிவு அதிகாரி, சார்-பதிவாளர், தொழிலாளர் உதவி ஆய்வாளர், நன்னடத்தை அதிகாரி, பேரூராட்சி நிர்வாக அதிகாரி, வருவாய் துறை உதவியாளர் உள்ளிட்ட பதவி இடங்களுக்கு இந்த தேர்வு நடக்கிறது.

இளநிலை பட்டதாரிகள் மட்டுமின்றி, முதுநிலை பட்டதாரிகள், என்ஜினீயர்கள், வக்கீல்கள், விவசாய பட்டதாரிகள் உள்பட 4 லட்சத்து 40 ஆயிரம் இப்பதவிகளுக்கு விண்ணப்பித்தனர்.

அவர்களில் தகுதியுள்ள 4 லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு ஹால் டிக்கெட் அனுப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை தேர்வுகள் நடைபெறுகிறது.

சென்னையில் மட்டும் 256 இடங்களில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடக்கின்றன. மாவட்டம் தோறும் பல்வேறு மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+