For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு நடக்கிறது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் குரூப்-2 தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடக்கிறது. மொத்தம் 1,225 காலி இடங்களுக்கு சுமார் 4 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.

நகராட்சி கமிஷனர், தலைமைச் செயலக உதவி பிரிவு அதிகாரி, சார்-பதிவாளர், தொழிலாளர் உதவி ஆய்வாளர், நன்னடத்தை அதிகாரி, பேரூராட்சி நிர்வாக அதிகாரி, வருவாய் துறை உதவியாளர் உள்ளிட்ட பதவி இடங்களுக்கு இந்த தேர்வு நடக்கிறது.

இளநிலை பட்டதாரிகள் மட்டுமின்றி, முதுநிலை பட்டதாரிகள், என்ஜினீயர்கள், வக்கீல்கள், விவசாய பட்டதாரிகள் உள்பட 4 லட்சத்து 40 ஆயிரம் இப்பதவிகளுக்கு விண்ணப்பித்தனர்.

அவர்களில் தகுதியுள்ள 4 லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு ஹால் டிக்கெட் அனுப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை தேர்வுகள் நடைபெறுகிறது.

சென்னையில் மட்டும் 256 இடங்களில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடக்கின்றன. மாவட்டம் தோறும் பல்வேறு மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X