Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு: 1,330 குறள் உள்ள மோட்டார் சைக்கிளில் பிரசாரம்

Subscribe to Oneindia Tamil

வேலூர்:​ ஊட்டியைச் சேர்ந்த இளைஞர் என்.ஆர்.செந்தில்​குமார்(39) என்பவர் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த,​1,330 குறளையும் தனது மோட்டார் சைக்கிளில் எழுதி பிரசாரம் செய்து கொண்டிருக்கிறார்.​

நீலகிரி மாவட்டம் அருவங்காட்டை சேர்ந்த என்.ராமன் என்பவரின் மகன் இவர். உதகை அரசுக் கல்லூரியில் பி.ஏ.​இளங்கலை முடித்துவிட்டு, தனியார் தொலை​தொடர்புத்​துறையில் மேலாளராகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.​

இவர் தனது இரு சக்கர வாகன பிரசாரத்தை கடந்த 6-ம் தேதி தொட்ட​பெட்டா-வில் தொடங்கினார்.​ இவரின் மோட்டார் சைக்கிளில் 1,330 திருக்குறள்களும் எழுதப்பட்டுள்ளது.​பிரசாரத்தின் போது மாநாடு குறித்த துண்டுப் பிரசுரங்களை பொது​மக்களிடம் விநியோகித்து வருகிறார்.​

நீலகிரி,​கோவை, ஈரோடு, நாமக்கல்,​சேலம்,​தருமபுரி,​கிருஷ்ணகிரி, வேலூர் மாவட்டங்களில் பிரசாரத்தை முடித்துள்ள அவர், அடுத்து சென்னை,​விழுப்புரம்,​திருவண்ணாமலை,​புதுச்சேரி,​கடலூர்,​நெய்வேலி மாவட்டங்களில் தனது பிரசாரத்தை முடித்துக் கொண்டு, சிதம்பரம் வழியாக கோவை செல்ல திட்டமிட்டுள்ளார்.​

சுமார் 3,500 கிலோ மீட்டர்​ தூர சுற்றுப்பயணத்தின்போது, முக்கிய பிரமுகர்களிடம் கையொப்பம் பெற்று மாநாட்டின்போது தமிழக முதல்வர் கருணாநிதியிடம் கொடுக்கவுள்ளாராம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+