உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு: 1,330 குறள் உள்ள மோட்டார் சைக்கிளில் பிரசாரம்
வேலூர்: ஊட்டியைச் சேர்ந்த இளைஞர் என்.ஆர்.செந்தில்குமார்(39) என்பவர் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த,1,330 குறளையும் தனது மோட்டார் சைக்கிளில் எழுதி பிரசாரம் செய்து கொண்டிருக்கிறார்.
நீலகிரி மாவட்டம் அருவங்காட்டை சேர்ந்த என்.ராமன் என்பவரின் மகன் இவர். உதகை அரசுக் கல்லூரியில் பி.ஏ.இளங்கலை முடித்துவிட்டு, தனியார் தொலைதொடர்புத்துறையில் மேலாளராகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.
இவர் தனது இரு சக்கர வாகன பிரசாரத்தை கடந்த 6-ம் தேதி தொட்டபெட்டா-வில் தொடங்கினார். இவரின் மோட்டார் சைக்கிளில் 1,330 திருக்குறள்களும் எழுதப்பட்டுள்ளது.பிரசாரத்தின் போது மாநாடு குறித்த துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம் விநியோகித்து வருகிறார்.
நீலகிரி,கோவை, ஈரோடு, நாமக்கல்,சேலம்,தருமபுரி,கிருஷ்ணகிரி, வேலூர் மாவட்டங்களில் பிரசாரத்தை முடித்துள்ள அவர், அடுத்து சென்னை,விழுப்புரம்,திருவண்ணாமலை,புதுச்சேரி,கடலூர்,நெய்வேலி மாவட்டங்களில் தனது பிரசாரத்தை முடித்துக் கொண்டு, சிதம்பரம் வழியாக கோவை செல்ல திட்டமிட்டுள்ளார்.
சுமார் 3,500 கிலோ மீட்டர் தூர சுற்றுப்பயணத்தின்போது, முக்கிய பிரமுகர்களிடம் கையொப்பம் பெற்று மாநாட்டின்போது தமிழக முதல்வர் கருணாநிதியிடம் கொடுக்கவுள்ளாராம்.












Click it and Unblock the Notifications