கவிஞர் தேவதேவனுக்கு விருது

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தமிழின் முக்கிய கவிஞர்களுள் ஒருவரான தேவதேவனுக்கு வாழ்நாள் இலக்கிய சாதனை விருது வழங்கப்பட உள்ளது.

கவிஞர் தேவதேவன்

நவீன தமிழ்க் கவிஞர்களுள் தேவதேவனுக்கு தனி இடம் உண்டு. தூத்துக்குடியில் வசித்து வருகிறார். இவரது இயற்பெயர் பிச்சுமணி கைவல்யம். இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 'மின்னற்பொழுதே தூரம்", குளித்துக் கரையேறாத கோபியர்கள்", 'பறவைகள் காலுன்றி நிற்கும் பாறைகள்", 'மார்கழி" போன்றன இவரது முக்கிய தொகுப்புகள். இவரது கவிதைகள் முழுவதும் தொகுக்கப்பட்டு 'தேவதேவன் கவிதைகள்" என தமிழினி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, லில்லி தேவசிகாமணி விருது, தேவமகள் அறக்கட்டளை விருது, தமிழக அரசின் விருது மற்றும் விளக்கு ஆகிய விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன.

வாழ்நாள் இலக்கிய சாதனை விருது

தூத்துக்குடி பியர்ல் ஃபவுண்டேஷன் வழங்கும் 'சாராள் -ராஜபாண்டியன் வாழ்நாள் இலக்கிய சாதனை விருது" தேவதேவனுக்கு வழங்கப்பட இருக்கிறது. வருகிற ஞாயிறன்று தூத்துக்குடியில் நிகழ இருக்கும் விருது வழங்கும் விழாவில் எழுத்தாளர் ஜெயமோகன், புன்னைவனராசன் ஆகியோருடன் சட்டமன்ற உறுப்பினர் மாஃபாய் பாண்டியராஜனும் கலந்துகொள்ள இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+