தீபாவளியன்று காலையில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க எது நல்ல நேரம்?
சென்னை: நாளை தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. நாளை காலை எந்த நேரத்தில் தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம் என்பது குறித்து ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர்.
தீபாவளி என்றதும் பட்டாசு, இனிப்பு, புத்தாடைதான் முதலில் நினைவுக்கு வரும். ஆனால் தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பதுதான் மிக முக்கியமானது. தீபாவளியன்று தலைக்கு எண்ணெய் வைத்துக் கொள்வதற்கும் கூட நல்ல நேரம் பார்ப்பது அவசியம்.
வழக்கமாக எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்கு நிறைய பார்க்க வேண்டும் என்பார்கள். இரவு நேரங்களில் குளிக்கக் கூடாது. சூரிய அஸ்தமனம், உதய காலங்கள், பிறப்பு நேரம், மரண நேரம் உள்ளிட்டவற்றிலும் தலைக்கு எண்ணெய் வைத்துக் கொள்ளக் கூடாது. சனி, புதன், திங்கள் ஆகிய கிழமைகளில் மட்டுமே எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம் என பல சம்பிரதாயங்கள் உள்ளன.
இருப்பினும் தீபாவளிக்கு இதிலிருந்து விதி விலக்கு உண்டு. காரணம், அன்றைய தினம் நாம் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது என்பது கங்கையில் குளிப்பதற்குச் சமம் என்பார்கள். அதனால்தான் இதற்கு கங்காஸ்னானம் என்று பெயர்.
இப்படிப்பட்ட தீபாவளிக் குளியலுக்கு நல்ல நேரம் பார்ப்பது அவசியம் இல்லையா. இந்த ஆண்டு அதாவது நாளை அதிகாலை 3 மணி முதல் 4.53 மணிக்குள் குளிப்பது நல்லது என்கிறார்கள். அந்த நேரத்திற்குள் எண்ணெய் தேய்த்துக் குளித்து, புத்தாடை அணிந்து, வீட்டில் தீபமேற்றி பூஜை செய்வது உகந்தது.
பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பது பழமொழி. அப்படிப்பட்ட அருமையான புதன்கிழமையன்று இந்த ஆண்டு தீபாவளி வருவது கூடுதல் சிறப்பாகும். அதை விட மகா சிறப்பான விஷயம் என்னவென்றால், விஷ்ணுவுக்கு உகந்த இந்த நாளில், இந்திரனின் நட்சத்திரமான சித்திரையும் கூடி வருவதுதான். எனவே இந்த ஆண்டு தீபாவளி மிகவும் சிறப்பான நேரத்தில் வருகிறது.
இப்படிப்பட்ட தீபாவளிப் பண்டிகையை உரிய குளியல் நேரத்தில் தலைக்குக் குளித்து தீபமேற்றி கடவுள்களை வணங்கி, புத்தாடை அணிந்து, இனிப்புகளை உண்டு, உற்றார், உறவினர்கள், நண்பர்கள் சகிதம் இனிய முறையில் கொண்டாட அனைவருக்கும் வாழ்த்துகள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications