திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்ட திருவிழா துவங்கியது: 2-ம் தேதி தேரோட்டம்
திருவில்லிப்புத்தூர்: திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்ட திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனால் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
108 வைணவ திருத்தலங்களில் விருதுநகர் மாவட்டம் திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலும் முக்கியமான ஒன்றாகும். இங்கு ஆண்டாள் பிறந்த தினமான ஆடிப்பூரத்தன்று நடக்கும் தேரோட்டம் உலகப் புகழ் பெற்றது.
இந்த ஆண்டுக்கான ஆடிப்பூர தேரோட்டம் வரும் ஆகஸ்ட் மாதம் 2-ம் தேதி நடக்கிறது. இதற்கான பணிகள் விரு விருப்பாக நடந்து வருகின்றன.
திருவிழாவின் தொடக்கமாக ஆண்டாள் கோயிலில் சமீபத்தில் ரூ. 1 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள தங்கக் கொடிமரத்தில் இன்று காலை 9.45 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. இங்கு தினமும் இன்னிசை கச்சேரிகள், கலை நிகழ்ச்சிகள், மாணவ, மாணவியரின் மாறுவேடப் போட்டி, திருப்பாவை பாடல் ஒப்புவித்தல் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
தேரோட்டத்தை காண தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் திருவில்லிப்புத்தூரில் வந்துதங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications