மத்திய அரசு நிறுவனம் சார்பில் சென்னையில் ஒரு மாத வேலைவாய்ப்பு பயிற்சி
மதுரை: சென்னையில் மத்திய அரசு நிறுவனம் சார்பில் ஒரு மாத கால வேலைவாய்ப்பு பயிற்சி நடத்தப்படுகின்றது.
மத்திய அரசின் குறு, சிறு நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் கீழ் குறு, சிறு, நடுத்தர தொழில் மேம்பாட்டுக் கழகம் செயல்பட்டு வருகின்றது.
இந்த நிறுவனம் சார்பில் ஒரு மாத கால சுய வேலைவாய்ப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.
இதில் கைப்பேசி பழுது பார்த்தல், பராமரித்தலுக்கான பயிற்சி நாளை(23-ம் தேதி) முதல் ஜுன் மாதம் 22-ம் தேதி முடிய ஒரு மாத காலம் நடை பெறுகின்றது.
காலையிலும், மாலையிலும் இரண்டு பிரிவாக நடைபெறும் இந்த பயிற்சியில் முதலில் வருவோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
இந்த பயிற்சியில் சேர விரும்புவோர் ரூ.3,500-க்கான வரைவோலையை எடுத்து நேரில் செலுத்தலாம். இதில், எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கான சலுகை கட்டணம் ரூ. 1750 ஆகும். முழுமையான பயிற்சி முடிந்தபின் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப் படும்.
மேலும் இது குறித்து தகவல்கள் அறிய 044-2500170/2250 1011, 12, 13 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications