துபாயில் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க செயற்குழு கூட்டம், கவிதை நூல் வெளியீடு

கூட்டத்திற்கு சங்க தலைவர் சாதிக் காக்கா தலைமை வகித்தார். அவர் தனது உரையில் சிறப்பான முறையில் செயல்பட்டு வரும் செயற்குழு உறுப்பினர்களைப் பாராட்டினார்.
ஒருங்கிணைப்பாளர் ஜாபர் சித்தீக் வரவேற்றார். வாழ்வியல் முன்னேற்றம் குறித்த பயிற்சி முகாம் நடத்துதல், ஏழை மாணவர் கல்வி உதவித்தொகை, உறுப்பினர் சேர்க்கை, இணையதளம், அமீரக அளவிலான முன்னாள் மாணவர் சங்க ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி நடத்துவது, பணிமேம்பாட்டு பயிற்சி முகாம் நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இளையான்குடி கவிஞர் ஹிதாயத்துல்லாஹ்வின் 'வஹியாய் வந்த வசந்தம்" கவிதை நூலை சாதிக் காக்கா வெளியிட முதல் பிரதியை ஜாஹிர் ஹுசைன் பெற்றுக் கொண்டார்.
கூட்டத்தில் ஜமால் முஹ்யித்தீன், முதுவை ஹிதாயத், ஃபலீல் ரஹ்மான், அப்துல் ரசாக், அப்பாஸ், ஹாஜா, ஃபயாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications