அஜ்மானில் அம்பேத்கர் பிறந்த நாள் சிறப்புக் கருத்தரங்கம்

Subscribe to Oneindia Tamil

அஜ்மான்: அஜ்மானில் தாய்மண் வாசகர் வட்டம் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி நடத்திய சிறப்புக் கருத்தரங்கம் கடந்த 20ம் தேதி காலை வெகு சிறப்பாக நடைபெற்றது.

அம்பேத்கர் பிறந்தநாள் சிறப்புக் கருத்தரங்கிற்கு தாய்மண் வாசகர் வட்ட தலைவர் செ.ரெ.பட்டணம் மணி தலைமை தாங்கினார்.

பன்னூலாசிரியர் கவிஞர் ஏம்பல் தஜம்முல் முஹம்மது சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புச் சொற்பொழிவாற்றினார். அவர் தனது உரையில் இந்திய அரசியல் சட்டமேதையினை பின்பற்றி வரும் நீங்கள் அவர் விரும்பும் சமூக மாற்றத்தை ஏற்படுத்திடும் முடிவை மேற்கொள்ள வேண்டிய தருணம் இது என்றார்.

மேலும் அம்பேதகர் குறித்து கவிமதி தயாரித்த தொகுப்பை கவிஞர் ஏம்பல் தஜம்முல் முஹம்மது வெளியிட முதல் பிரதியினை கருணாநிதி பெற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டார்.

அம்பேத்கரியம் ஒரு பார்வை என்கிற கருத்தரங்கிற்கு திரு. கருணாநிதி தலைமைதாங்க அம்பேத்கரியம் குறித்து ஆசிஃப்மீரான், குறிஞ்சிதாசன், கவிமதி, அசோக் மற்றும் பலர் உரையாற்றினார்கள். செயலாளர் முத்தமிழ் வளவன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+