கோடை மழை நாளில் காதலாய் சில நினைவுகள்…
பருவகாலத்தில் பெய்யும் மழையை விட கோடை காலத்தில் பெய்யும் மழைக்கு தனி விஷேசம் உண்டு. வெப்பத்தில் தகிக்கும் பூமியை குளிர்விக்க பெய்யும் மழை அது.
கோடை காலத்தில் அநேகமாக மாலை அல்லது இரவில்தான் மழை கொட்டும். இடியும் மின்னலுமாய் வானத்தில் தனியாய் ஒரு ராஜாங்கம் அரங்கேறும்.
சிலசமயம் ஆலங்கட்டிகள் கூட கொட்டும். அதை பொறுக்கி பாட்டிலில் சேகரிப்பது கூட தனி சுவாரஸ்யம்தான். பருவ கால மழையில் நனைய வேண்டாம் என்று எச்சரிக்கும் பெற்றோர்கள் கூட கோடை மழையில் குளிக்க சம்மதம் சொல்லிவிடுவார்கள்.
வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக இதோ கோடை மழை கொட்டத் தொடங்கிவிட்டது. இதுபோன்ற ஒரு மழைநாளில் ஏற்பட்ட சில சுவாரஸ்ய அனுபவங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம்

நிறம் மாறும் வானம்
காலையில் இருந்தே வாட்டி வதைக்கும் வெயில் புழுக்கத்தை அதிகரிக்கும் அப்போதே உணர்ந்து கொள்ளலாம் மாலை நேரத்தில் மழை அடித்து ஆடப்போகிறது என்று. அதே போல மதியத்தில் இருந்தே வானத்தில் மாற்றங்கள் ஆரம்பமாகிவிடும்.

சின்னச் சின்ன மின்னல்கள்
கருமேகங்கள் சூழ்ந்திருக்க வானத்தில் பளிச் பளிச் என்று மின்னி இதோ இன்னும் கொஞ்சநேரத்தில் இடிக்கப்போகிறேன் என்று அறிவிக்கும். சொன்னது போல இடிச்சத்தம் காதைப் பிளக்கும்.

மண்வாசனை ஆளை அசத்தும்
அது என்னவோ தெரியாது கோடை காலத்தில் மழை பெய்யும் போது மட்டும் அலாதியான வாசனை ஆளைத்தூக்கும். அதற்காகவே ஜன்னலை திறந்து வைத்து மழையை ரசித்த நாட்கள் உண்டு.

ஆலங்கட்டி சேகரித்த அனுபவம் இருக்கா?
கிராமப்புறங்களில் அதிகம் ஓட்டுவீடுதான். கோடை காலத்தில் பெய்யும் மழையில் சின்னச் சின்ன கற்களை எறிவது போல ஓடுகளில் சத்தம் கேட்கும் அப்போதே புரிந்து விடும் ஆலங்கட்டி விழுகிறது என்று அதை சேகரிக்க தனி போட்டியே நடக்கும்.

ஓழுகும் மழைநீரில் குளியல்
அங்கொன்றும் இங்கொன்றுமாக காரை வீடுகள் இருந்தாலும் மழை நீர் வழிந்தோடுவதற்கு குழாய் பொருத்தியிருப்பார்கள். அதை தூம்பு என்று ஊர்ப்பக்கம் கூறுவார்கள். அதை தேடிச் சென்று அதில் கொட்டும் மழை நீரில் குளிக்கும் அனுபவம் தனி சுகம்தான்.

கப்பல் விளையாட்டு
பள்ளி விடுமுறை காலம் என்பதால் நோட்டு புத்தகங்கள் பழையதாகவிடும் எடைக்கு போடுவதற்கு முன்பாக பாதி காகிதங்கள் கப்பல்களாகி மழைநீரில் மிதக்கவிடுவது அலாதியான மகிழ்ச்சிதான்.

துணையுடன் ஒரு பயணம்
மழை பொழியும் மாலை நேரத்தில் கடற்கரை சாலையில் துணையுடன் கை கோர்த்து நடப்பது தனி இன்பம். உங்கள் துணைக்கும் மழை மீதான காதல் இருப்பது முக்கியம். திருமணமான புதிதில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் மழையில் நனைந்தவாறு பயணித்த நாட்கள் இப்போதும் கண்முன்னே வந்து செல்கிறது. அப்புறம் காய்ச்சல் வந்து அவஸ்தை பட்டது வேறு விசயம்.
இதோ தொடங்கிவிட்டது கோடை மழை. காதலோடு நனையுங்கள்... காய்ச்சல் வந்தால் அப்புறம் கவலைப்படலாம்.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications