உயரமான பெண்களை குறிவைக்கும் புற்றுநோய்: ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்
நியூயார்க்: உயரமான பெண்களுக்கு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நியூயார்க்கில் உள்ள யெஷிவா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் புற்றுநோய் குறித்த ஆய்வு ஒன்றை நடத்தினர். அந்த ஆய்வில் மாத விலக்கு நின்ற பிறகு பெண்களுக்கு புற்றுநோய் ஏற்பட எடை அல்ல உயரம் தான் காரணமாக இருக்கிறது என்பதை கண்டுபிடித்துள்ளனர்.
புற்றுநோய்க்கு உயரம் காரணமாக இருப்பது ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

50 முதல் 79 வரை
1993ம் ஆண்டு முதல் 1998ம் ஆண்டு வரை 50 வயது முதல் 79 வயது வரை உள்ள 144,701 பெண்கள் இந்த ஆய்வில் பங்கேற்றுள்ளனர். 12 ஆண்டுகள் அவர்களை கண்காணித்ததில் அவர்களில் மொத்தம் 20,928 பேருக்கு புற்றுநோய் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

19 வகை புற்றுநோய்கள்
19 வகை புற்றுநோய்கள் குறித்து ஆய்வு செய்ததில் அவை அனைத்திற்கும், உயரத்திற்கும் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது.

உயரம்
மார்பக புற்றுநோய், குடல் புற்றுநோய், சிறுநீரக புற்றுநோய், கருப்பை புற்றுநோய், தைராய்டு புற்றுநோய் ஆகியவற்றுக்கும் உயரத்திற்கும் தொடர்பு உள்ளது.

வளர்ச்சி
புற்றுநோய் என்பது வளர்ச்சியுடன் தொடர்புடையது. அதனால் வளர்ச்சியை தூண்டும் ஹார்மோன்களுக்கு புற்றுநோய்க்கும், தொடர்பிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.












Click it and Unblock the Notifications